வியாழன், டிசம்பர் 22, 2011

ஷாருக்கான் மீது கேரளா போலீசார் வழக்கு பதிவு : ஆபாச நிகழ்ச்சி நடத்தியதாக குற்றச்சாட்டு


பெண்களை வைத்து ஆபாச நிகழ்ச்சி நடத்தியதாக பிரபல இந்தி நடிகர் ஷாரூக்கான் மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொச்சியில் கடந்த 4ம் தேதி ஷோரூம் ஒன்றின் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த நடிகர் ஷாரூக்கான், கலை நிகழ்ச்சி நடத்தினார். இதில், அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த “ரா ஒன்“ படத்தில் இடம் பெற்ற “சம்மக் சலோ“ என்ற பாடலுக்கு நடனமாடினார். 


அவருடன் அரைகுறை ஆடைகள் அணிந்த பல பெண்களும் நடனம் ஆடினார்கள். இது ஆபாச நடனம் என்று கூறி மேத்யூ சாஜு புல்லுவிழி என்பவர் எர்ணாகுளம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிபதி, நடிகர் ஷாரூக்கான் மற்றும் ஷோரூம் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி, ஷாரூக்கான் மீதும் ஷோரூம் உரிமையாளர்கள் மீதும் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் தடை சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக