வெள்ளி, மார்ச் 14, 2014

சிங்களர்களிடையே தமிழர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் : ராஜபக்சே சொல்கிறார்

நாங்கள் போர் நடத்தியது, விடுதலைப்புலிகளுடன்தான், தமிழர்களுடன் அல்ல. தென்பகுதியில், சிங்களர்களிடையே தமிழர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்று ராஜபக்சே கூறினார்.




ஐ.நா. தீர்மானம்
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இலங்கை இறுதிக்கட்ட போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மீது, 2 வாரத்தில் ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. இலங்கை அரசுக்கு இவ்விவகாரம் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

மட்டன் பிரியாணியால் நின்றுபோன திருமணம்: என்ன கொடுமை சார் இது

பெங்களூருவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மட்டன் பிரியாணி தான் வேண்டுமென மாப்பிள்ளை வீட்டார் அடம்பிடித்ததால் அந்த திருமணமே நிறுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.


பெங்களூருவில் உள்ள தன்னேரி பகுதியை சேர்ந்தவர்களான யாஸ்மின் தாஜ் மற்றும் சைபுல்லா ஆகியோருக்கு பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.இந்நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 11 ஆம் தேதி ப்ரசெர் டவுனின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரவேற்பு நிகழ்ச்சிக்காக பெண் வீட்டார் 30 கிலோ சிக்கன் பிரியாணி வாங்கியிருந்தனர். 

தங்கம், வெள்ளி இறக்குமதி 71.4 சதவீதம் சரிந்தது

தங்கம், வெள்ளி இறக்குமதி 71.4 சதவீதம் சரிந்து ரூ.9,943 கோடியாக குறைந்தது.
 


நடப்பு கணக்கு பற்றாக்குறையை ஈடுசெய்யவும், பண வீக்கத்தை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதனால், தங்கம், வெள்ளி இறக்குமதி செய்வது குறைந்து வந்தது.

ரயில் வேகத்திற்கேற்ப பறக்கும் விளம்பர பலகை அழகியின் கூந்தல்

ஸ்வீடனில் உள்ள ஒரு ரயில் நிலைய நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையில் இளம்பெண்ணின் தலைமுடி ரயிலின் வேகத்திற்கேற்ப பறந்தது அங்கிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது.


ஸ்டோக்ஹோல்மில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் விளம்பர பலகையில் உள்ள இளம்பெண்ணின் தலைமுடி அங்கு வரும் ரயிலின் வேகம் மற்றும் திசைக்கு ஏற்ப பறக்கிறது.
பின்னர், ரயில் சென்றதும் அப்பெண் தலை தலைமுடியை சிரித்துக்கொண்டே சரி செய்துக்கொள்கிறார். இது ஒரு தலைமுடி எண்ணெய்க்கான விளம்பரம். முதல் முதலாக இந்த விளம்பரத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்ந்தனர்.

வியாழன், மார்ச் 13, 2014

உங்களில் யார் அடுத்த பிரதமர்... களை கட்டும் லோக்சபா தேர்தல்: ரூ 60,000 கோடிக்கு ரகசிய சூதாட்டம்!...

லோக்சபா தேர்தல் நெருங்குவதையொட்டி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், அடுத்து மத்தியில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என அனல் பறக்கும் சூதாட்டம் தொடங்கி விட்டதாம். பரபரப்பாக மக்களால் எதிர்பார்க்கப் படுகின்ற செய்திகள் அல்லது செயல்களைப் பயன்படுத்தி காசாக்க முயற்சிப்பது தான் இந்தச் சூதாட்டக்காரர்களின் முக்கிய வேலை. அந்நவகையில் கடந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சூதாட்டக்காரர்கள் பணம் சம்பாதிக்க வீரர்களை கைக்குள் போட்டுக்கொண்டு ஆட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயித்தார்கள். நடந்து முடிந்த பிறகு கண்டுபிடிக்கப்பட்ட இந்த சூதாட்டம் பலரின் முகமூடிகளைக் கிழித்து அவர்களின் நிஜ முகத்தை உலகிற்கு அம்பலப் படுத்தியது. அந்த வகையில் சூதாட்டக்காரர்களின் பார்வை தற்போது 16வது லோக்சபா தேர்தல் மீது விழுந்துள்ளதாம்.

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நூற்றாண்டு பாராம்பரியம் மிக்க ராமேஸ்வரம் பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் தீவை நாட்டின் பிறப்பகுதிகளுடன் இணைக்கும் வகையில் கடந்த 1914ஆம் ஆண்டு பிப்ரவரி 24ல் பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கப்பட்டது. பாம்பன் பாலத்தின் நூற்றாண்டு விழா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்பட்டது. 

கேரளாவில் காங். எம்.எல்.ஏ.வுக்கு அடி–உதை: கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினர்

கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதான சரிதா நாயர் சமீபத்தில் ஜாமீனில் விடுதலை ஆனார். அவர் கண்ணூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல்லா குட்டி மீது திருவனந்தபுரம் போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு புகார் கூறினார்.
புகாரில் 'சோலார் பேனல் தொழில் சம்பந்தமாக பேச வேண்டும் என்று கூறி என்னை அப்துல்லா குட்டி நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்தார். அங்கு சென்ற என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

‘ஆல் ரைட், குட் நைட்' மாயமான மலேசிய விமான பைலெட்டின் கடைசி தகவல்

நேற்றைய தகவலின்படி ரேடார் தொடர்பை இழப்பதற்கு முன்பாக அந்த விமானம், மலாய் தீபகற்பத்துக்கும், இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கும் இடையே சுமார் 805 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ள மலாக்கா ஜலசந்திக்கு மேலே சென்றதாக தகவல் வெளியாகியது.

இந்தியாவின் துணைத்தூதரார் தேவயானி கோப்ரகடே மீதனா வழக்கை ரத்து செய்தது அமெரிக்க கோர்ட்டு


அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்தியாவின் துணைத்தூதராகப் பணியாற்றி வந்தவர் தேவயானி கோப்ரகடே (வயது 39). இவர் தனது பணிப்பெண்ணின் விசா விண்ணப்பத்தில் தவறான தகவல்கள், வாக்குமூலம் அளித்து மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் அவர் கைது செய்யப்பட்டார். கை விலங்கிட்டு, ஆடை அவிழ்த்து சோதனை செய்து அவர் அவமதிக்கப்பட்டார். இது இந்தியாவின் கடும் கண்டனத்துக்கு வழிவகுத்தது.

மலேசிய விமானம் மாயம்: எங்கே எங்கள் சொந்தங்கள்?... கொந்தளிப்பில் உறவினர்கள்

மாயமான மலேசிய விமானம் பற்றி 5 நாட்களாக தகவல்கள் எதுவும் தெரியவராத காரணத்தால், உண்மையான தகவல்களை தெரிவிக்கக்கோரி, விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் மலேசியன் எர்லைன்ஸ் அதிகாரிகள் மீது தண்ணீர் பாட்டல் வீசி கோபத்தை வெளிப்படுத்தினர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி கடந்த 8ஆம் தேதி அதிகாலை புறப்பட்டுச் சென்ற மலேசிய விமானம் திடீரென மாயமானது.

தொழில்துறை உற்பத்தி 0.1 சதவீதம் அதிகரிப்பு


ஜனவரி மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 0.1 சதவீதம் உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் 0.16 சதவீதம் (மறு மதிப்பீட்டின்படி) சரிவடைந்து இருந்தது. நவம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2.1 சதவீதம் மற்றும் 1.8 சதவீதம் குறைந்து இருந்தது.
முன்னேற்றம்
ஆக, மூன்று மாதங்கள் தொடர் சரிவுக்குப் பின் தொழில்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி குறித்து பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் சி.ரங்கராஜன் கூறுகையில், ‘‘ஜனவரியில் எதிர்பார்ப்புகளுக்கு இணையாக தொழில்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் உற்பத்தி துறையில் வளர்ச்சி ஏற்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஓட்டுப்பதிவுக்கு கூடுதலாக 2 மணி நேரம்; தேர்தல் கமிஷன் முடிவு

ஓட்டுப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
ஆலோசனை
பாராளுமன்ற தேர்தல், அடுத்த மாதம் 7–ந்தேதி தொடங்கி, மே 12–ந்தேதிவரை 9 கட்டங்களாக நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை மொத்தம் 9 மணி நேரம் ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ஓட்டுப்பதிவு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்தனர்.
இதுபற்றி தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத், தேர்தல் கமிஷனர்கள் பிரம்மா, நசீம் சைதி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் கால் இறுதியில் லீ நா, சிபுல்கோவா

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டத்தில் லீ நா-சிபுல்கோவா ஆகியோர் மோதுகிறார்கள்.


சர்வதேச டென்னிஸ்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இன்டியன்வெல்ஸ் நகரில் பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சீன வீராங்கனை லீ நா 6-1, 6-4 என்ற நேர்செட்டில் 268-ம் நிலை வீராங்கனை அலெக்சான்ட்ரா வோஸ்னியாக்கை (கனடா) தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

மகனுக்காக தினமும் 18 மைல் தூரம் நடக்கும் தந்தை!

சீனாவை சேர்ந்த நபர் ஒருவர், தினமும் 18 மைல் தூரம் நடந்து தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று வருகிறார்.சீனாவின் தென்மேற்கு பகுதியை சேர்ந்தவர் Yu Xukang, இவரது 12 வயது மகன் Xiao Qiang.
இச்சிறுவனால் தானாக நடக்க முடியாது, இருப்பினும் தன் மகனுக்கு சிறப்பான கல்வியை கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், சமுதாயத்தில் சிறந்த மனிதராக உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் தினமும் 18 மைல் தூரம் நடந்து அவனது தந்தை பள்ளிக்கு அழைத்து சென்று வருகிறார்

எகிப்தில் இஸ்ரேல் தூதரகம் முன்பு வெடிகுண்டு தாக்குதல்


எகிப்து தலைநகர் கெய்ரோவில் இஸ்ரேல் தூதரகத்தின் முன்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதிருஷ்டவசமாக  இந்த தாக்குதலில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

‘இன்டெல் அறிவியல் விருது’ வென்று அமெரிக்காவில் 2 இந்திய மாணவர்கள் சாதனை


அமெரிக்காவில் அறிவியலில் சிறந்து விளங்குகிற மாணவர்களை தேர்வு செய்து இன்டெல் அறிவியல் திறன் கண்டறிவு விருது வழங்கப்பட்டு வருகிறது.

சீனா செயற்கைகோள் கடலில் எடுத்தப் படம் : அதிர்ச்சி தகவல்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் கடந்த 8–ந்தேதி மாயமானது. விமானத்தில் பயணம் செய்த 4 இந்தியர்கள் உள்பட 239 பேரும் பலியாகி விட்டனர் என நம்பப்படுகிறது. மாயமான விமானத்தை சீனா, அமெரிக்கா, மலேசியா நாட்டு விமானங்கள் மற்றும் கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

புதன், மார்ச் 12, 2014

நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ 40 கட்சி தொகுதிகளில் தனித்துப்போட்டி


 
நாடு முழுவதும்  40 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ.,தனித்துப்போட்டியிடுகிறது

ராமநாதபுரம் லோக்சபா தொகுதி "சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா'(எஸ்.டி.பி.ஐ.,) கட்சி வேட்பாளர் நூர் ஜியாவுதீன் அறிமுக கூட்டத்தில்

 மாநில தலைவர் தெஹ்லான் பாகவி கூறியதாவது:வரும் லோக்சபா தொகுதியில் முதன் முறையாக தமிழகத்தில் 3  தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறோம். தமிழக பிரச்னையை வலியுறுத்தி மார்ச் 15ல், தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளோம். 

மும்பையில் ஆம் ஆத்மி கட்சியினர் அராஜகம் : பொது மக்கள் முகம் சுளித்தனர்.


ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த கெஜ்ரிவால் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் இன்று காலை மும்பை வந்தார்.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த அவர், நேராக வாசலில் நின்றிருந்த ஆட்டோவில் ஏறி, அந்தேரி ரெயில் நிலையம் சென்றார். கெஜ்ரிவால் ஆட்டோவில் செல்லும் காட்சியை பலர் தங்களது செல்போனில் படம் பிடிக்க முயற்சித்ததால் சாலையில் கூட்டம் கூடியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

ஆலங்கட்டி மழையால் 90000 ஹெக்டேர் பயிர்கள் நாசம்

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த பதினைந்து நாளாக பெய்து வரும் கடுமையான ஆலங்கட்டி மழையினால் யாவத்மால் மாவட்டத்தில் மட்டும் 90 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் அழிந்துவிட்டன.

“இதுவரை 87881 ஹெக்டேர் பரப்பளவிலான கோதுமை மற்றும் பருப்பு பயிர்கள் மற்றும் 1036 ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த காய்கறி பயிர்கள் நாசமடைந்துள்ளன. 882 ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பழவகைகளும் இம்மழையினால் கடுமையாக சேதமடைந்துள்ளன. அதிகபட்சமாக புசத் பகுதியில் 22000 ஹெக்டேர் விவசாய நிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது” என்று அம்மாவட்ட வேளாண்துறை அதிகாரி டி.ஐ.கெய்க்வாட் தெரிவித்தார்.

இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் அஷ்வின் மட்கல் கூறுகையில், “இம்மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகாக்களும் ஆலங்கட்டி மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி விவசாய மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

விவசாய பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்குவது மாநில அரசின் கடமை என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் 5-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு


ஆம் ஆத்மி கட்சியின் 5-வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 56 வேட்பாளர்கள் கொண்ட இந்த பட்டியலில், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சுரேஷ் கோபடே இடம் பெற்றுள்ளார். இவர் மகாராஷ்டிர மாநிலம் பாரமதி தொகுதியில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து போட்டியிடுகிறார்.

கேண்டிடேட்ஸ் செஸ்: ஆனந்த் சாதிப்பாரா?

ரஷியாவில் உள்ள கான்ட்டி மான்சிஸ்க் நகரில் நாளை முதல் 31–ந்தேதி வரை கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி நடக்கிறது. 

இந்திய கிராண்ட்மாஸ்டரும், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் கிராம்னிக், டிமிட்ரி, சுவிட்லர், செர்ஜி (ரஷியா) தபோலோவ் (பல்கேரியா), மேம்டியரோவ் (அசர்பைஜான்), அரோனியன் (அர்மேனியா) ஆகிய 8 வீரர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

மைக்கேல் சூமாக்கர் உடல்நிலையில் சிறுமுன்னேற்றம்



பனிச்சருக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கிய பிரபல கார்பந்தய வீரரான மைக்கேல் சூமாக்கரின் தலைப்பகுதி பாறையின் மீது மோதியதால் பலத்த காயமேற்பட்டது. இதன் காரணமாக கோமா நிலைக்கு அவர் செல்லும் நிலை ஏற்பட்டது.

"49 ஓ" : விவசாயிகளின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதை




கவுதம் மேனனிடம் உதவியாளராக இருந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது இயக்கத்தில் உருவான படம் 49 -ஒ இதில்  கவுண்டமணி நாயகனாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி நடித்த படம். உடல்நலக் குறைவு காரணமாக சில காலம் நடிக்காமல் இருந்த கவுண்டமணி ‘வாய்மை' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.

விவசாயிகளின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைக்களத்தைக் கொண்டது. இந்த திரைபடம்  அடுத்த மாதம் ஏப்ரலில் வர இருக்கிறது.

நடுவானில் பெண்ணுக்கு வலிப்பு : மலேசிய விமானம் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது

மலேசியா சென்ற விமானத்தில் நடுவானில் இந்தோனேசியாவை சேர்ந்த பெண் பயணிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் சென்னையில் அவசரமாக தரை இறக்கப்பட்டது.


பெண் பயணிக்கு வலிப்பு
மஸ்கட்டில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று அதிகாலை 254 பயணிகளுடன் விமானம் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. விமானம் நடுவானில் சென்றபோது அதில் பயணம் செய்த இந்தோனேசியாவைச் சேர்ந்த ரெபிமர்த்தினி(வயது 50) என்ற பெண்ணிற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டார்.

மே 12-ஆம் தேதிக்கு பிறகு அனைத்து போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும்: ஐபில் நிர்வாகம்


இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த போட்டி ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இந்தியாவில் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியும், பாராளுமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் வருவதால் , தேர்தல் முடியும் வரை ஐ.பி.எல். போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவித்து விட்டது.

அமெரிக்காவில் உள்ள 9 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

அமெரிகாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ பகுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் பிரான்சிஸ் நகரம் முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. சுமார் 150-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்க்கு பிறகு தீயை அணைத்தனர்.

உண்மையை சொல்லுங்கள்;மலேசியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு





மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் கடந்த 8–ந்தேதி மாயமானது. விமானத்தில் பயணம் செய்த 4 இந்தியர்கள் உள்பட 239 பேரும் பலியாகி விட்டனர் என நம்பப்படுகிறது.

நடிகர் அமீர்கான் காவல்துறையிடம் புகார்: பேஸ்புக்கில் தவறான செய்திக்காக...

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் தன் மீது தவறான தகவல் வெளியிட்டமைக்காக, தகவல் வெளியிட்டவர் மீது நடிகர் அமீர்கான் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.நடிகர் அமீர்கான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘சத்ய மேவ ஜயதே‘ என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் குடும்ப பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை, பெண் சிசுக்கொலை உள்ளிட்ட சமூக பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

தேர்தல் புறக்கணிப்புக்காகவே பாதுகாப்பு படையினர் மீது நக்சலைட்டுகள் தாக்குதல்: மத்திய அரசு





சத்தீஷ்கரில் பாதுகாப்பு படையினர் மீது நகசலைட்டுகள் நடத்திய தாக்குதல் தேர்தல் புறக்கணிப்புக்காக நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட  தாக்குதல் என்று தெரியவந்துள்ளது. அதேபோல், பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களையும் நக்சலைட்டுகள் குறிவைத்து திட்டமிட்டுள்ளனர். 


நக்சலைட்டுகளின் இந்த சதித்திட்டம்  குறித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே உள்துறை அமைச்சகம், நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த 9 மாநிலங்களில் உள்ள தலைமை செயலாளர்களுக்கும் டிஜிபிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை முன்பு இலங்கை தமிழர்கள் ஆர்ப்பாட்டம்






இலங்கை தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வேண்டியும், அமெரிக்கா கொண்டுவரப்பட இருக்கும் வலுவற்ற, நீதி அற்ற தீர்மானம் மற்றும் விசாரணையை நிராகரித்தும், இன அழிப்புக்கு அனைத்துலக விசாரணையையும், தமிழ் ஈழத்துக்கான வாக்கெடுப்பை நடத்தக்கோரியும் புலம் பெயர் தமிழர்கள் ஜெனிவாவில் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர்.

மலேசிய விமானம் சீனா செல்லாமல் போனது எங்கே?





மாயமான மலேசிய விமானம், சீனா செல்லாமல் போனது எங்கே என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.


ரேடார் தொடர்பு இழப்பு
மலேசிய விமானம் 239 பயணிகளுடன் கடந்த 7–ந்தேதி நள்ளிரவு 12.41 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டது. அந்த விமானம், புறப்பட்டுச் சென்ற 2 மணி நேரத்துக்குப் பின்னர், அதாவது 8–ந்தேதி அதிகாலை 2.40 மணிக்கு (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.10 மணி) ரேடார் தொடர்பை இழந்தது.
தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோதுதான் இந்த விமானம் ரேடார் தொடர்பை இழந்தது என முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

செவ்வாய், மார்ச் 11, 2014

உதடுகள் வறட்சி அடைவது ஏன் என்று தெரியுமா?

உடலிலேயே மிகவும் மென்மையான ஒரு பகுதி தான் உதடுகள். இந்த உதடுகள் தான் ஒருவரின் அழகை அதிகரித்து வெளிப்படுத்தும். ஆம், உதடுகளில் சிறு மாற்றங்கள் இருந்தாலும், அது முகத்தின் அழகையே மாற்றிவிடும். ஆனால் பலர் உதடுகளை சரியாக பராமரிக்காமல் இருக்கின்றனர். உதடுகள் பெண்களுக்கு மட்டும் அழகை கொடுப்பதில்லை, ஆண்களுக்கும் தான். எனவே உதடுகளை பராமரிப்பது என்பது முக்கியமான ஒன்று.

குஜராத்தில் ராகுல் இன்று ஆய்வு: முடிவுக்கு வருமா மோடியின் பொய்பிரச்சாரம் ?


குஜராத் மாநிலம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்து விட்டது என்று கூறி வரும் அம்மாநில முதல் மந்திரி நரேந்திர மோடியின் கூற்றை ஆய்வு செய்வதற்காக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 5-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் குஜராத் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.

இதற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மோடி கூறுவது போல் குஜராத் அணு அளவு கூட முன்னேறவில்லை என்று குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவில் 70 இந்திய பாஸ்போர்ட்டுகள் மாயம் அதிர்ச்சி தகவல்




அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள பிஎல்எஸ் இன்டர்நேஷனல்ஸ் என்ற தனியார் சேவை நிறுவனம் பாஸ்போர்ட், விசா தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

அங்குள்ள இந்தியத் தூதரகம் தங்களின் தேவைகளுக்காக இந்த நிறுவனத்தின் சேவைகளை உபயோகப்படுத்திக்கொள்ளும். அதுபோல் தூதரகத்தால் இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்டிருந்த 70 இந்திய பாஸ்போர்ட்டுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29-ம்தேதி காணாமல்போனது கண்டுபிடிக்கப்பட்டது.

மாயமான மலேசிய விமானம்:நேரில் பார்த்தவர்கள் வாக்குமூலம்....


239 பயணிகளுடன் கடந்த 8-ம் தேதி அதிகாலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கிச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வியட்நாம் கடல் எல்லைக்கு மேலே பறந்த போது கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து, திடீரென மாயமானது.

சீனா மற்றும் அமெரிக்க விமானங்கள் மற்றும் கப்பல்கள் கடந்த 2 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தியும் அந்த விமானத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கியிருக்கலாம். அல்லது, தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்பது உள்பட பல்வேறு யூகங்கள் மேலோங்கி வரும் நிலையில், அந்த விமானத்தின் இறுதி நிமிடங்களை நேரில் பார்த்த சிலர் பேட்டியளித்துள்ளனர்.

தண்டவாளத்தில் விரிசல்: உயிரை பனையவைத்து பல உயிர்களை காப்பாற்றிய வீர மங்கை


திருவனந்தபுரம் அருகே உள்ள களக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜமீலா பீவி (வயது 55). இவரது வீடு அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ளது.

நேற்று காலை 6.30 மணி அளவில் தனது வீட்டு பக்கத்தில் இருந்த தண்டவாளத்தில் இருந்து பயங்கர சத்தம் கேட்டதால் ஜமீலா பீவி அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இந்த வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து சென்றபோது தான் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு பெரிய சத்தம் கேட்டு உள்ளது. அடுத்தடுத்து இந்த தண்டவாளம் வழியாக ரெயில்கள் வரும் என்பதால் ஜமீலா பீவி பதறியடைந்து கொண்டு குடியிருப்பு பகுதிக்கு ஓடினார். அங்கு நின்று கொண்டு இருந்த ஒரு வாலிபரிடம் இதுபற்றி தெரிவித்த ஜமீலா பீவி அவரிடம் சிவப்பு துணியை எடுத்து வரும்படி கூறினார்.

மேலூரில் பதுங்கிருந்த 2 தீவிரவாதிகள் கைது : கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை





மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள உத்தங்குடியில் தனியாருக்கு சொந்தமான பல்பொருள் அங்காடி உள்ளது. இங்கு கடந்த மாதம் 12–ந்தேதி இரும்பு பைப் வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் போன்றவை கண்டெடுக்கப்பட்டது. மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வழக்கு தொடர்பாக சிவகங்கையை சேர்ந்த தமிழ்செல்வம் என்பவரை மாவட்ட போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். தமிழ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த இவரிடம் நடை பெற்ற விசாரணையில், மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.

ஏமன்: தொடரும் அமெரிக்க பயங்கவாதம்









ஏமன் நாட்டின் மரிப் பகுதியில் நேற்றிரவு அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய அதிரடி தாக்குதலில்  அல் கொய்தாவின் 2 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

மரிப் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த அல் கொய்தாவின் 2 முக்கிய தலைவர்களான முஹம்மது ஜபிர் அல்-சப்வானி மற்றும் அப்துல்லா முபாரக் பின் ஹமத் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

20 ஓவர் உலக கோப்பை: இங்கிலாந்து அணியில் பெல்


இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜோ ரூட். கடந்த வாரம் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது இவரது கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

முத்தமிட்ட வாலிபரின் உதட்டை கவ்விய ஆமை





சீனாவில் பியூஜியன் மாகாணத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டில் செல்லமாக ஒரு ஆமை ஒன்றை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று வெளியே சென்ற அவர் ஆமையை தூக்கி அதை முத்தமிட்டு கொஞ்சினார்.


அப்போது, அந்த ஆமை எதிர்பாராதவிதமாக அவரது உதட்டை இறுக்கமாக கவ்வி கடித்து பிடித்துக் கொண்டது. அதில் இருந்து விடுபட முயன்றார். ஆனால், அவரால் முடியவில்லை.

குடும்பக் கடனை அடைக்க தனது இளமையை தியாகம் செய்ய தீர்மானித்த இளம் பெண்


சவுதி அரேபியா நாட்டில் சுவாரஸ்யமான சுயம்வர நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

சவுதியில் வாழும் ஒருவர் தனது குடும்ப செலவினங்களுக்காக ஒரு பணக்காரரிடம் இருந்து சிறுகச் சிறுக சுமார் 30 லட்சம் திர்ஹம்களை கடனாக வாங்கியிருந்தார்.

நீண்ட காலம் ஆகியும் வாங்கியவர் பணத்தை திருப்பி செலுத்தாததால் வெறுத்துப் போன பணக்காரர், போலீசில் புகார் அளித்தார். அந்நாட்டின் சட்டத்தின்படி, இது தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில் கடனை அடைக்கும் வரை பிரதிவாதியை சிறையில் அடைக்க நேரிடும்.

பாராளுமன்ற தேர்தலுக்கு அணிகள் தயார்; தமிழகத்தில் 5 முனை போட்டி உறுதி





தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக அடுத்தமாதம் (ஏப்ரல்) 24–ந்தேதி நடக்கிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

அ.தி.மு.க–தி.மு.க.
பாராளுமன்ற தேர்தலை அ.தி.மு.க. இந்த முறை தனித்து சந்திக்கிறது. கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் அக்கட்சி தமிழகம்–புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா தமிழ்நாட்டில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தனது கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

இன்டியன்வெல்ஸ் டென்னிஸ் 3–வது சுற்றில் ராட்வன்ஸ்கா, வோஸ்னியாக்கி வெற்றி





 இன்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டத்தில் போலந்து வீராங்கனை ராட்வன்ஸ்கா, டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

239 பயணிகளுடன் மாயமான விமானத்தின் மர்மம் நீடிப்பு



239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் எதுவும் கிடைக்காததால், விமானம் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

239 பயணிகளுடன் மாயம்
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் சீன தலைநகர் பீஜிங் நோக்கி மலேசிய விமானம் ஒன்று கடந்த 7-ந்தேதி நள்ளிரவில் புறப்பட்டது. அந்த விமானம், 8-ந்தேதி அதிகாலை தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.
அது தெற்கு சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே கடலில் நொறுங்கி விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதனால் விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பலியாகி இருக்கலாம் என்றும் தகவல் வெளியானது.

திங்கள், மார்ச் 10, 2014

தொடரும் இனவெறி படுகொலைகள்... இந்திய பன்முகத்தன்மைக்கு ஆபத்து...


ருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரின் மகனும், கல்லூரி மாணவருமான நிடோ டானியம் தலைநகர் டெல்லியில் இனவெறிபிடித்த பெட்டிக்கடைக்காரர்களால் கடந்த ஜனவரியில் அடித்தே கொல்லப்பட்டுள்ளார். டானியத்தின் தலைமுடியலங்காரத்தை ஏளனம் செய்து வம்புக்கு இழுத்து அவர்கள் தாக்கியதில், மறுநாள் அவர் மரணமடைந்துள்ளார்.

ஞாயிறு, மார்ச் 09, 2014

உக்ரைன் ,அமெரிக்கா ரஷ்யாவை எச்சரித்துள்ளது

கிரிமீயாவை  தன்னோடு இணைக்கும் எந்த முயற்ச்சியையும் ரஷ்ய மேற்கொள்வதானது பேச்சுவார்த்தையை முறிக்கும்,அது அந்த பகுதியில் அமைதியை கொண்டுவரும் நோக்கத்திற்கு எதிரானது என அமெரிக்கா கண்டித்துள்ளது.

பாதுகாக்கபடுமா பெண் சமூகம் ?


திருப்பத்தூர் அருகே உள்ள கோவில் இலையாத்தங்குடியைச் சேர்ந்தவர் கலா (வயது 21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்பு வீடு திரும்பவில்லை. கவலையடைந்த பெற்றோர் மகளை பல இடங்களில் தேடினர். எங்கும் அவரை காணவில்லை.

பீட்டர்சனை நீக்கியது அவமானம்: கிறிஸ்கெய்ல்





இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கெவின் பீட்டர்சன் ஆசஷ் டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்வி காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரை அணியில் இருந்து கழற்றி விட்டது.

திருப்பதியில் ரூ.16 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்




ஆந்திரா மாநிலம் திருப்பதியில் தடை செய்யப்பட்ட குட்கா, போதை பாக்குகள் விற்பனை செய்யபடுவதாக விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அபுதாபியில் 13 கோடி ரூபாய்க்கு ஏலம் போன வி.ஐ.பி. செல் நம்பர்



700 போட்டியாளர்கள் பங்கேற்ற ஏலத்தில் 050-7777777 என்ற செல் நம்பர் 78 லட்சத்து 77 ஆயிரத்து 777 திர்ஹமுக்கு விலை போய் சாதனை படைத்துள்ளது.