உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 17, 2015

54 பேருடன் மாயமான இந்தோனேஷிய விமானம் மலையில் மோதி நொறுங்கியது

இந்தோனேஷியாவில் 54 பேருடன் சென்ற விமானம் திடீரென மாயமானதை அடுத்து அந்த விமானத்தை தேடும் பணி மிகத் தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், இந்த விமானம் மலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது என்றும் அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்துத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

திங்கள், ஆகஸ்ட் 03, 2015

ரீ யூனியன் தீவில் உலோக சிதைவு கண்டெடுப்பு: மாயமான மலேசிய விமானத்துக்கு உரியதா என ஆய்வு?

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 (போயிங் 777 ரகம்), கடந்த ஆண்டு மார்ச் 8-ந் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகர் பீஜிங்கிற்கு சென்றபோது நடுவானில் மாயமானது.

செவ்வாய், ஜூன் 23, 2015

கத்தி முனையில் தாயை மடக்கி நகைகளை கொள்ளயடிக்கவந்த கும்பலை திணறடித்த 7 வயது சிறுவனுக்கு வீரதீர விருது

மத்திய இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் பகுதியை சேர்ந்த முஹம்மது அலி என்ற ஏழு வயது சிறுவன் சம்பவத்தன்று தனது வீட்டின் மாடிப்பகுதியில் உள்ள அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். நள்ளிரவு நேரத்தில் முன்வாசல் கதவு உடைத்து திறக்கப்படும் ஓசை கேட்டு, கீழே இறங்கி வந்தவன், அந்த காட்சியை கண்டு திடுக்கிட்டான். 

வியாழன், ஜூன் 18, 2015

துருக்கி முன்னாள் அதிபர் சுலேமான் டெமிரெல் மரணம்

துருக்கி நாட்டின் முன்னாள் அதிபர் சுலேமான் டெமிரெல்(90)  மரணம் அடைந்தார்.

தனது 40-வது வயதில் அரசியலுக்குள் நுழைந்த இவர் துருக்கி நீதி கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திங்கள், மே 18, 2015

முஹம்மது முர்ஸிக்கும், யூசுஃப் அல் கர்ளாவிக்கும் மரண தண்டனை!

சதிப் புரட்சியின் மூலம் நீக்கம் செய்யப்பட்ட எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸிக்கு எகிப்து நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
முஹம்மது முர்ஸி மற்றும் 105 இஃக்வானுல் முஸ்லிமீன் தலைவர்களுக்கான தண்டனை தீர்ப்பை கெய்ரோ குற்றவியல் நீதிமன்றம் முஃப்தியிடம் ஒப்படைத்துள்ளது.

வெள்ளி, மே 15, 2015

இந்தியாவின் வரைபடத்தை சீன தொலைக்காட்சி தவறாக வெளியிட்டதால் சர்ச்சை

பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் வரைபடத்தை சீனாவின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தவறாக வெளியிட்டதால் சர்ச்சை வெடித்துள்ளது.

திங்கள், மே 11, 2015

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

நீர்மூழ்கி கப்பலில் இருந்து புறப்பட்டு கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரியின் இலக்கை தாக்கும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வடகொரியா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. இது கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஞாயிறு, மே 10, 2015

மாஸ்கோ அணிவகுப்பில் ஏவுகணை தாங்கிச் சென்ற டேங்க் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜிப்படையை வென்றதின் 70-ம் ஆண்டு நினைவு தின பேரணி நேற்று ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான ரஷ்ய மக்கள் கலந்து கொண்டு கண்கவர் பேரணியை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

சனி, மே 09, 2015

பிரிட்டனில் 2வது முறையாக ஆட்சியை பிடித்தார் டேவிட் கேமரூன்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் டேவிட் கேமரூன் தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அதிக இடங்களை பிடித்து தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

அங்கு மொத்தமுள்ள 650 தொகுதிகளில், இதுவரை 540 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஞாயிறு, ஏப்ரல் 26, 2015

நேபாள நிலநடுக்கம்: தேடல் மற்றும் மீட்பு நிபுணர்களை அனுப்புகிறது இங்கிலாந்து

நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு உதவி செய்யும் பொறுட்டு தேடல் மற்றும் மீட்பு நிபுணர்கள் அடங்கிய 8 அணிகளை இன்று இரவே அனுப்புவதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது. 

சனி, ஏப்ரல் 18, 2015

கனடாவில் நரேந்திர மோடி கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு !!!!

modi-visit
பிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ளார் அதன் ஒருபகுதியாக 3 நாள் பயணமாக கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இறுதி நாளான இன்று வான்குவரில் உள்ள சீக்கியர்களின் குருத்வாராவுக்கு சென்றார். முன்னதாக டொரண்டோவில் இருந்து வான்குவருக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பரும் உடன் சென்றார்.

புதன், மார்ச் 25, 2015

இந்தோனேசியாவில் இரு ஆஸ்திரேலியர்களின் கருணை மனுவை அதிபர் நிராகரித்த விவகாரம்: நீதிமன்றத்தில் அப்பீல்

இந்தோனேசியாவின் பாலி தீவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற ஆண்ட்ரூ சான், மயூரன் சுகுமாரன் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.


இந்த தண்டனை கடந்த பிப்ரவரி மாதத்திலேயே நிறைவேற்றப்படவிருந்த நிலையில், சர்வதேச அழுத்தங்கள் காரணமாக தண்டனையை நிறைவேற்றுவது ஒத்திவைக்கப்பட்டது.

திங்கள், மார்ச் 16, 2015

சீன பகுதியில் மீண்டும் குண்டு விழுந்தால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என மியான்மருக்கு சீனா எச்சரிக்கை


மியான்மர் நாட்டில், சீன எல்லைப்பகுதியில் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு எதிராக மியான்மர் படைகள் அவ்வப்போது வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் மியான்மர் விமானம் போட்ட ஒரு குண்டு, சீனப்பகுதியில் விழுந்து, அதில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இது இரு நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளி, மார்ச் 13, 2015

எரிமலை வெடிப்பு: கோஸ்டா ரிகாவின் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது

எரிமலை வெடிப்பின் காரணமாக வளிமண்டலத்தில் பரவியுள்ள சாம்பலால் கோஸ்டா ரிகாவின் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

செவ்வாய், மார்ச் 03, 2015

ஜகிர் நாயக்குக்கு சிறப்புக்குரிய பரிசளித்து சவுதி மன்னர் கவுரவித்தார் !!!!

இஸ்லாமிய சொற்பொழிவுகள் மற்றும் பேருரைகளின் மூலம் உலகெங்கிலும் உள்ள அரபு மொழி பேசாத இஸ்லாமியர்களிடையே நன்கு அறிமுகமாகியுள்ள ஜகிர் நாயக் (49), இந்தியாவில் உள்ள இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

மும்பையை சேர்ந்த இவர் இஸ்லாமுக்கு ஆற்றியுள்ள தொண்டினையும், சேவையையும் சிறப்பிக்கும் வகையில் சவுதியின் புதிய மன்னர் சல்மான் நேற்று பரிசு வழங்கி கவுரவித்தார்.

வியாழன், பிப்ரவரி 26, 2015

ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி 150 பேர் பலி: 12 கிராமங்கள் அழிந்தன

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. அங்குள்ள பான்ஷீர் பகுதியில் தொடர்ந்து பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இது மலை பிரதேசமாகும். நேற்று திடீரென பல இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் அழிந்தன.

சனி, பிப்ரவரி 21, 2015

படகு தகர்ப்பு நாடகம் என்பது இந்திய அதிகாரியின் அறிக்கையில் தெளிவாகிவிட்டது - பாகிஸ்தான் வெளியுறவுத் துறை

பாகிஸ்தான் படகு தான் உத்தரவிட்டதாலேயே குண்டுவீசி அழிக்கப்பட்டது என்று கூறிய பிரச்சினைக்குரிய கடலோர காவல்படை அதிகாரி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.


குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே இந்திய கடல் எல்லையில் நடமாடிய ஒரு பாகிஸ்தான் படகு டிசம்பர் 31-ந் தேதி தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த பாகிஸ்தானியர்கள் அனைவரும் பலியானார்கள். இந்த படகை இந்திய கடலோர காவல் படையினர் சுற்றிவளைத்து அதில் இருந்தவர்களை சரண் அடையும்படி கூறியதாகவும், ஆனால் அவர்கள் தாங்களாகவே குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

வெள்ளி, பிப்ரவரி 20, 2015

சவுதியின் புதிய மன்னர் அறிவித்த 2 மாத சம்பளம் போனஸ்: மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்

சவுதி அரேபியா நாட்டின் மன்னரான அப்துல்லா கடந்த மாதம் 23-ம் தேதி மரணம் அடைந்ததையடுத்து அவரது மகன் சல்மான் புதிய மன்னராக பதவியேற்றுக்கொண்டார். 

அந்நாட்டு வழக்கப்படி புதிதாக பொறுப்பேற்றுக்கொள்ளும் மன்னர்கள் மக்களுக்கு எதிர்பாராத சலுகைகளை அளித்து மகிழ்விப்பதுண்டு. அவ்வகையில், புதிய மன்னர் சல்மானும் ஒரு இனிய அறிவிப்பை வெளியிட்டார். அரசு பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெற்று படிக்கும் மாணவ-மாணவியருக்கு 2 மாத போனஸ் வழங்குமாறு அவர் பிறப்பித்த உத்தரவு பலரை ஆனந்தத்தில் திக்குமுக்காட வைத்தது. 

சனி, பிப்ரவரி 14, 2015

அமெரிக்காவில் இந்தியரை தாக்கிய போலீஸ் அதிகாரி கைது உளவுத்துறை விசாரணைக்கும் உத்தரவு

அமெரிக்காவில் உள்ள மேடிசன் சிட்டியில் தனது மகனின் இல்லத்தில் தங்கியிருந்த அப்பாவி இந்தியரான சுரேஷ் பாய் பட்டேலை போலீஸ் அதிகாரி ஒருவர் தாக்கியதில் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். 

வியாழன், பிப்ரவரி 12, 2015

தற்கொலைகளில் 20% வேலைவாய்ப்பின்மையால் நிகழ்கிறது: ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.


ஒரு வருடத்தில் நடக்கும் 5 தற்கொலைகளில் ஒன்று வேலைவாய்ப்பின்மையால் நிகழ்கிறது என்று சூர்ஜ் பல்கலைக்கழக ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2000 முதல் 2011-ஆம் ஆண்டுவரை 63 நாடுகளில் நடந்த தற்கொலைச் சம்பவங்களைக் கொண்டு நடத்தபட்ட ஆய்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.