திருவனந்தபுரம்:நேற்று(30/05/2013) கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடந்த யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்திற்குஎதிரான ‘ஜன விசாரணை யாத்திரை’யின் இறுதியில் நடந்த பேரணி, மற்றும் மாநாட்டில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள், பொய்க்கதைகளை ஜோடித்தும், கறுப்புச் சட்டங்களை பிரயோகித்தும் நவீன சமூக எழுச்சிக்கு தடை போட்டுவிடலாம் என்று கனவு காணும் அதிகார, ஆளும் வர்க்கத்திற்கு பதிலடியாக அமைந்தது.
வெள்ளி, மே 31, 2013
கோடிகள் கொட்டும் ஐ.பி.எல்: அணிகளின் சராசரி லாபம் ரூ.108 கோடி!
ஜென்டில்மேன்களின் விளையாட்டு என்ற அந்தஸ்தோடு இருந்த கிரிக்கெட் விளையாட்டை, வியாபாரிகளின் பணம் கொழிக்கும் சந்தையாக மாற்றிய பெருமை ஐ.பி.எல்லுக்கு உண்டு. ஐ.பி.எல் என்ற 50 நாள் கிரிக்கெட் திருவிழா மூலம், விளையாட்டை சினிமாவோடு கலந்து ஒரு பொழுதுபோக்குக் கலவையாக்கி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1200 கோடி ரூபாயை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சம்பாதிக்கிறது. கிரிக்கெட்டை விட பணத்தின் விளையாட்டும் ஐ.பி.எல்லில் அதிகம்.
தமிழகத்தில் குட்கா-பான் மசாலாவுக்கு தடை! : அரசாணை வெளியீடு!
இந்தியா முழுவதும் குட்கா, பான்மசாலா போன்ற மெல்லும் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிப்பது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளைப் பற்றி கேட்டிருந்தது. அதனை கவனத்தில் கொண்ட தமிழக அரசு, புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் அவற்றுக்கு மீண்டும் தடை விதிக்க முடிவு செய்தது.
வியாழன், மே 30, 2013
இடுப்பில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்து பின்லேடன் இறந்தாரா?
அல் கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனின் மரணம் தொடர்பாக உறுதி செய்யப்படாத பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. இந்நிலையில் மேலும் ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு ஒசாமாவின் மெய்காப்பாளர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் அமெரிக்க 'சீல்' படையினர் சுற்றி வளைத்தபோது தனது இடுப்பில் இருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்து தான் ஒசாமா பின்லேடன் தற்கொலை செய்துக் கொண்டதாக அவரது மெய்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தா 'கல்ப் நியூஸ்' என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
புதன், மே 29, 2013
பாஜக அழிவுப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது! - ராம் ஜெத்மலானி!
புது டெல்லி: "முட்டாள்தனமான நடவடிக்கை எடுத்துள்ள பாஜக பல லட்சம் வாக்குகளை இழக்கப்போகிறது" என கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக 6 ஆண்டுகாலம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பாஜகவின் தலைமையை விமர்சித்ததற்காக மூத்த வழக்கறிஞரும், பாஜக மாநிலங்களவை உறுப்பினருமான ராம் ஜெத்மலானி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.
மியான்மர்:முஸ்லிம்கள் 2 குழந்தைகள் மட்டும் போதும் என்ற அரசின்கொள்கைக்கு சூகி கண்டனம்!
யங்கூன்: மியான்மரில் ராக்கேன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு 2 குழந்தைகள் மட்டும் போதும் என்ற உள்ளூர் நிர்வாகத்தின் முடிவுக்குஎதிர்கட்சி தலைவர் ஆங்சாங் சூகி கண்டனம் தெரிவித்துள்ளார். ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு முதன் முதலாக சூகி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் கலவரம்!
லாஷியோ: பர்மாவின் வடகிழக்கு பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பர்மாவின் வடகிழக்கில் உள்ள ஷான் மாகாணத்தின் தலைநகர் லாஷியோ. இங்கு, புத்த மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை முஸ்லிம் ஒருவர் எரித்து கொன்றுவிட்டதாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து, முஸ்லிம்களுக்கு எதிராக புத்த மதத்தினர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
செவ்வாய், மே 28, 2013
அப்ஸா : உமர் அப்துல்லாஹ்வுக்கு காங்கிரஸ் ஆதரவு!
ஸ்ரீநகர்:ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை(அப்ஸா) கஷ்மீரின் சில பகுதிகளில் இருந்து வாபஸ் பெறவேண்டும் என்ற ஜம்மு-கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ்வின் கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. தேவையுடைய பகுதிகளில் மட்டும் அமல்படுத்தவேண்டிய தற்காலிக சட்டமே அப்ஸா. தேவையற்ற பகுதிகளில் இருந்து இச்சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்று ஜம்மு-கஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சைபுத்தீன் சோஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.அதேவேளையில் திறந்த மனதுடன் கூடிய பேச்சுவார்த்தைக்கு பதிலாக இப்பிரச்சனையை அரசியல் ஆக்குகிறார் முதல்வர் உமர் அப்துல்லாஹ் என்று சோஸ் குற்றம் சாட்டினார்.
பேஃஸ் புக் நட்பால் வந்த விபரீதம்! : ரூ.5 கோடிக்காக கடத்தப்பட்ட சிறுவன்!
பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசிக்கும் முஸ்தபா(13) என்ற சிறுவன் 24 மணி நேரமும் இணையதளத்தில் மூழ்கியிருந்ததால் தனது பேஃஸ் புக் மூலம் பல முகம் தெரியாத புதிய நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தான். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இவனுக்கு பேஃஸ் புக்கில் அறிமுகமான சிலர் முஸ்தபாவை சந்திக்க விரும்புவதாக கூறினர்.
ஜெர்மனியில் பிள்ளையை ஒழுங்காக வளர்க்காத தாய்க்குத் தண்டனை!
ஜெர்மனியில் கடந்த 2009ம் ஆண்டில் ஒரு பள்ளிக்கூடத்தில் டிம் கிரட்ஷ்மர்(Tim Kretschmer) என்ற 17 வயது நிரம்பிய மாணவன் ஒருவன் அங்கிருந்த 14 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். மேலும் இவனது துப்பாக்கிச் சூட்டால் 14 பேர் படுகாயமுற்றனர். இறுதியில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்து போனான். இந்தச் சிறுவனின் தாயே இந்தக் கொலைகளுக்கும், பள்ளிக்கூடத்திற்கு மில்லியன் கணக்கில் ஏற்பட்ட சேதங்களுக்கும் பொறுப்பு என்று சட்டதரனிகள் கூறினர்.
திங்கள், மே 27, 2013
எழுச்சியுடன் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் காஞ்சிபுர மாவட்ட சமூக நீதி மாநாடு!
முஸ்லீம்களுக்கு மத்தியில் 10 சதவீத இடஒதுக்கீட்டையும், மாநிலத்தில் 7 சதவீத இடஒதுக்கீட்டையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) மே 26 அன்று பல்லாவரம் ஆடுதொட்டி மைதானத்தில் கண்ணியமிகு காயிதே மில்லத் திடலில் சமூக நீதி மாநாட்டை நடத்தியது.
காலித் முஜாஹித் மரணம்:போலீஸின் பொய்க்கூற்றுகளும், நீதிமன்றங்களின் அநீதியும்!
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் விசாரணை கைதியாக இருந்த காலித் முஜாஹிதின் கஸ்டடி மரணத்தில் போலீஸின் போலி வேடம் குறித்தும், நீதிமன்றங்களின் அநீதங்களும் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. முஜாஹிதின் மரணம் குறித்த போலீசின் அதிகாரப்பூர்வ விளக்கம் சரியென்றால், அவர் ஒரு அமானுஷ்ய மனிதராக இருக்கவேண்டும். அதிகாரப்பூர்வ விளக்கத்தின் படி 32 வயதான காலித் முஜாஹித், மதியம் 3.40க்கு உடல் சுகவீனம் ஏற்பட்டு பாரபங்கியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றார். அங்கு வைத்து அவர் மரணமடைந்ததாக உறுதிச் செய்யப்படுகிறது. பாராபங்கியில் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் எஸ்.மினிஸாதி மருத்துவமனைக்கு சென்றபோது இதனை உறுதிச் செய்துள்ளார்.
வியாழன், மே 23, 2013
ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்புடைய குற்றவாளிகள்! மாலேகான் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!
நான்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகளை குற்றவாளியாக சேர்த்து 2006-ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜன்சி சிறப்பு மோக்கா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. லோகேஷ் சர்மா, டான்சிங், ராஜேந்திர சவுத்ரி,மனோகர் நர்வாரியா ஆகியோரின் பங்கினை தெளிவுப்படுத்தும் இக்குற்றப்பத்திரிகையில் சுவாமி அஸிமானந்தாவின் பெயர் இடம் பெறவில்லை.
புதன், மே 22, 2013
சவுதி அரேபியாவில் புதிய இந்திய பாஸ்போர்ட் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்தது!
புதிய பாஸ்போர்ட்களுடன் இந்தியாவில் இருந்து எங்கள் நாட்டிற்கு வேலை செய்ய வரும் இந்தியர்களை அனுமதிக்க முடியாது என சவுதி அரேபியா அரசு சமீபத்தில் அறிவித்தது. பழைய இந்திய பாஸ்போர்ட்களில் சம்பந்தப்பட்ட நபர்களின் புகைப்படம் இரண்டாம் பக்கத்தில் இடம்பெற்றிருந்தது. ஆனால், புதிய பாஸ்போர்ட்டில் மூன்றாம் பக்கத்தில் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
யாசின் மாலிக்குடன் இந்திய அரசு பேசினால் மட்டும் சரியா? - நாம் தமிழர் கட்சி கேள்வி!
சென்னை: "ஜம்மு – காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக்கை அழைத்து இந்திய அரசு பேசினால், அது சரி! நாங்கள் அழைத்து பேச வைத்தால் அது மட்டும் தவறா?" என நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கடலூரில் மே-18 எழுச்சி நாள் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக்கை நாம் தமிழர் கட்சி அழைத்து பேசவைத்தது தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுவருகிறது. சீமானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
இஷ்ரத் ஜஹான் நிரபராதி : சரத்பவார்!
மும்பை: குஜராத் போலீஸ் போலி என்கவுண்டர் மூலம் கொலைச் செய்த மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் நிரபராதியான கல்லூரி மாணவி என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத் பவார் கூறியுள்ளார்.
தானேயில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய சரத்பவார் கூறியது:தீவிரவாதி என்று முத்திரைக் குத்தி நிரபராதியான இளம்பெண்ணை முதல்வர் நரேந்திரமோடியும், குஜராத் போலீசும் கொலைச் செய்துள்ளனர். தீவிரவாதிகளை துப்பாக்கிக்கு இரையாக்கிய தனது போலீஸ் படையைக் குறித்து பெருமிதம் கொள்வதாக நரேந்திர மோடி கூறியிருந்தார். இஷ்ரத்
செவ்வாய், மே 21, 2013
சட்டீஷ்கரில் போலி என்கவுண்டர்: குழந்தைகள் உள்பட எட்டு கிராமவாசிகள் படுகொலை!
புதுடெல்லி: சட்டீஷ்கர் மாவட்டம் பிஜாப்பூரில் இஹாத்ஸமத்தே கிராமத்தில் சி.ஆர்.பி.எஃப் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உள்பட எட்டுபேர் அப்பாவி கிராமவாசிகல் கொல்லப்பட்டனர். ஏராளமானோரை காணவில்லை என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். இதனிடையே தங்களின் சிறப்பு படையான கோப்ராவைச் சார்ந்த பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் கொல்லப்பட்டதாக சி.ஆர்.பி.எஃப் கூறுகிறது.
கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிராமவாசிகள் என்பதை உறுதிச் செய்த சி.ஆர்.பி.எஃப் ஒரு மாவோயிஸ்ட் முகாமை அழித்துள்ளதாக கூறுகிறது. இச்சம்பவம் குறித்து சட்டீஷ்கர் போலீஸ் விசாரணையை துவக்கியுள்ளது. கிராமவாசிகள் வருடாந்திர
எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல் எல்லையை மூடியது எகிப்து!
கெய்ரோ: ஏழு சக ஊழியர்களை ஆயுதக் குழு ஒன்று கடத்திச் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல் எல்லையை எகிப்திய போலீஸ் மூடியுள்ளது. எகிப்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே சரக்குகளை பரிமாறிக்கொள்ளும் அல் அவ்ஜா பாதை மூடப்பட்டுள்ளது.சரக்குகளுடன் வந்த இரு நாட்டு ட்ரக்குகளும் இரு புறங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
திங்கள், மே 20, 2013
காலித் முஜாஹித் படுகொலை! - 42 போலீசார் மீது வழக்கு பதிவு!
தீவிரவாத குற்றச்சாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த காலித் முஜாஹித் மர்மமான முறையில் இறந்து விட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு திரும்பும்போது போலீஸ் வேனில் மாரடைப்பால் மரணம் என போலீஸ் கூறுகிறது, ஜெயிலை விட்டு செல்லும்போது பூரண உடல் நலத்துடன் சென்றதாக ஜெயில் கண்காணிப்பாளர் கூறுகிறார்.
ஞாயிறு, மே 19, 2013
நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்ட "காலித் முஜாஹித்" நீதிமன்றக் காவலில் படுகொலை!
தீவிரவாத குற்றச்சாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த காலித் முஜாஹித் நேற்று (18/05) மாலை மர்மமான முறையில் இறந்து விட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு திரும்பும்போது போலீஸ் வேனில் மாரடைப்பால் மரணம் என போலீஸ் கூறுகிறது, ஜெயிலை விட்டு செல்லும்போது பூரண உடல் நலத்துடன் சென்றதாக ஜெயில் கண்காணிப்பாளர் கூறுகிறார். இது திட்டமிட்ட கொலை என்கிறார், காலிதின் வழக்கறிஞர் ரந்தேர் சிங்.
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு 6 ஆண்டுகள் நிறைவு! - கைது செய்யப்படாத குற்றவாளிகள்!
9 பேர் கொல்லப்பட்டு, 58 பேர் காயமடைய காரணமான ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு நிகழ்ந்து 6 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளன. ஆனால், இக்குண்டுவெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டிய முக்கிய சூத்திரதாரிகளான சந்தீப் டாங்கே, ராம்ஜி கல்சங்கரா, சுரேஷ் நாயர் ஆகிய ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை இன்னமும் தலைமறைவாகவே உள்ளனர். அவர்களை கைது செய்ய புலனாய்வு ஏஜன்சிகளால் இதுவரை முடியவில்லை.
நீதி கேட்டு குடியரசு தலைவருக்கு அப்துல் நாஸர் மஃதனி கடிதம்!
கொச்சி: நிரபராதியான தனக்கு நீதி வேண்டும் என்று கோரி கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கின் பெயரால் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு கைதுச்செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநிலபி.டி.பி கட்சியின் தலைவரான அப்துல் நாஸர் மஃதனி இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தனக்கு நீதி வேண்டும் என்று கோரி 35 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.சிறை சூப்பிரண்டு வழியாக கடந்த வெள்ளிக்கிழமை இக்கடிதம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளத்.இக்கடிதத்தின் நகல் ஊடகங்களுக்கு பி.டி.பி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது ரஜீப் மூலம் அளிக்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)