சனி, செப்டம்பர் 26, 2015

மெக்கா புனித பயண நெரிசலில் சிக்கி பலியான 14 இந்தியர்களில் 2 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு முஸ்லிம்கள் புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டு மெக்கா சென்ற ஹஜ் யாத்திரீகர்கள் மெக்காவில் தொழுகை நடத்திவிட்டு மினா என்ற இடத்தில் சாத்தான்மீது கல் எறிதல் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர்.

மார்பிள் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு: வசுந்தரா மீது ரூ.45 ஆயிரம் கோடி ஊழல் புகார்-பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் ராமேஸ்வர்துதி, செய்தி தொடர்பாளர் ரண்தீப் கர்ஜேவாலே ஆகியோர் டெல்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

வியாழன், செப்டம்பர் 17, 2015

நரபலி புகாரில் தோண்டி எடுக்கப்பட்ட எலும்பு கூடுகள் பற்றி விசாரிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைப்பு

மேலூர் அருகே உள்ள இ.மலம்பட்டியில் உள்ள பி.ஆர்.பி. கிரானைட் குவாரியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டதாக சேவற்கொடியான் என்பவர் சகாயம் குழுவினரிடம் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இ.மலம் பட்டி மணிமுத்தாறு ஓடை சுடுகாட்டு பகுதியில் தோண்டியபோது 4 பேரின் மண்டை ஓடுகள் மற்றும் எலும்பு கூடுகள் கிடைத்தன.

கோட்சேவை தியாகி என்று சொல்லுகிற அளவுக்கு பா.ஜ.க.வுக்கு துணிச்சல் ஏற்பட்டிருக்கிறது; இளங்கோவன் கண்டனம்

நவஇந்தியாவின் சிற்பிகளாக கருதப்பட்ட அன்னை இந்திரா, ராஜீவ்காந்தி ஆகியோருடைய அஞ்சல் தலைகளை நிறுத்தி வைத்திருக்கிற மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள தபால் நிலையங்களின் முன்பாக மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார் 

வெள்ளி, செப்டம்பர் 11, 2015

மாநாட்டில் பெண்களை வைத்து குத்தாட்டம் போட்டது தமிழகத்திற்கு அவமானம்: இளங்கோவன் கண்டனம்

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெண்களை வைத்து குத்தாட்டம் போட்டது தமிழகத்திற்கு அவமானம் என இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.