புதுடெல்லி : குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ், கேஎப்சி சிக்கன், பெப்ஸி குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் கலந்து உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் தயாரிப்புக்களையும், இன்னும் சில பிரபலமான நிறுவனங்களின் உணவுப் பொருட்களையும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வக சோதனைக்கு தேர்ந்தெடுத்து சோதனை செய்ததில் இந்த பகீர் தகவல்
சனி, மார்ச் 31, 2012
பிரான்ஸ் அரசை பீடித்துள்ள இஸ்லாமாஃபோபியா: முஸ்லிம்கள் கூட்டாக கைது !
பாரிஸ்:தீவிரவாத குற்றம் சுமத்தி பிரான்சில் ஏராளமான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு நகரங்களில் நடந்த ரெய்டுகளில் இவர்கள் கைதானார்கள். துலூஸ் மற்றும் அதன் சமீப பிரதேசங்களில் அண்மையில் நடந்த தாக்குதல்களில் 3 ராணுவத்தினரும், 3 குழந்தைகளும் மரணமடைந்ததை தொடர்ந்து தீவிர இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரால் இக்கைது நடவடிக்கை என்று இஸ்லாத்தின்
இந்தியாவை ஆட்சி செய்யும் ஹிந்துத்துவா !
டெல்லி: சேதுசமுத்திர திட்டத்தைநிறைவேற்றுவதை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று பர்லிமன்ட் கூட்டத்தொடரில் திமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது. மத்தியை ஆளும் காங்கிரஸ் அரசும் பாரதிய ஜனதாவும் ஒன்றுதான் என்பது பல சந்தர்ப்பங்களில் நிருபிக்கப்பட்ட உண்மை. ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கம் இந்திய ராணுவம், உளவுத்துறை, காவல்துறை, நீதி துறை மற்றும் அரசியல் கட்சிகளில் ஊடுருவி விட்டது என்பதை நிருபிக்கும்
இன்று உலகம் முழுதும் இணையதளத்தை முடக்க சதி.இன்டர்போல் எச்சரிக்கை. இதுவரை 31 பேர் உலகம் முழுவதும் கைது .
உலகம் முழுவதும் இண்டர்நெட் சேவையை இன்று முடக்க இருப்பதாக சமூக விரோதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்று இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் ரொனால்டு கே. நோபல் எச்சரித்தார். சி.பி.ஐ. (மத்திய புலனாய்வுத் துறை) இயக்குநராகப் பணியாற்றிய டி.பி. கோலியின் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இண்டர்போல் அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் ரோனால்டு கே. நோபல் கலந்து கொண்டு பேசியதாவது:
போயஸ் தோட்டத்தில் மீண்டு சசி - ஜெ திடீர் அறிவிப்பு !
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட உடன்பிறவா தோழி சசிகலா மீதான கட்சி ரீதியான நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். எனினும் சசிகலாவின் உறவினர்கள் மீதான நடவடிக்கையில் மாற்றம் இல்லையென்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மீண்டும் ஜெ-சசி உறவு நீடிக்கும் என்ற வதந்திகள் உணமையாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வரும், அதிமுகவின் பொது செயலருமான ஜெயலலிதா, தவறு செய்துள்ள உறவினர்களின் உறவை துண்டித்து கொள்வதாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையை ஏற்று கொள்வதாகவும்,
மகளை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்த வழக்கில் பஞ்சாப் பெண் அமைச்சருக்கு 5 ஆண்டு சிறை!
பாடியாலா:தனது சொந்த மகளை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி கருக்கலைப்புச் செய்த வழக்கில் பஞ்சாப் மாநில பெண் அமைச்சருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாநில கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும், சிரோண்மனி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி(எஸ்.ஜி.பி.சி) முன்னாள் தலைவருமான ஜாகிர் கவுரின் மகள் ஹர்பிரீத் கவுர் கடந்த 2000-ம் ஆண்டில் மர்மமான முறையில் இறந்தார்.
காஸ்மி:ஜாமீன் மனு மீது இன்று விசாரணை!
புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் ஸய்யத் முஹம்மது அஹ்மத் காஸ்மி டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். ஜாமீன் மனுவை ஏற்றுக்கொண்ட முதன்மை மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் இம்மனு மீது இன்று விசாரணை நடத்துகிறார்.
தனக்கு எதிரான போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணை பூர்த்தியானதாக கூறி காஸ்மி ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றம் கூறுகிறது.
ரஷ்யாவில் இந்து கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு
மாஸ்கோ: ரஷ்யாவின் செயின்ட்பீட்டர்ஸ் பர்க்கில் இந்து மத அடையாளமாக உள்ள இந்து கோவில் ஒன்றை இடிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து கோவிலை நிர்வகித்து வரும் சுரேன் காராபெட்யான் என்பவர் கூறுகையில் கடந்த 1992-ம் ஆண்டு பெடரல் ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் இப்பகுதியில் கோவிலை கட்டுவதற்கு நில உரிமையாளரிடம் 49 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கூடங்குளம் போராட்டத்தில் கைதான 138 பேருக்கு ஜாமீன், 40 பேருக்கு ஜாமீன் மறுப்பு
திருநெல்வேலி:கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தின் போது, கைது செய்யப்பட்ட 178 பேர்களில் 138 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதேவேளையில், 40 பேரை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் திறக்க தமிழக அரசு அனுமதித்தவுடன், கடந்த வாரம் கூட்டப்புளி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக மக்களுக்கு ஒரு வருடத்திற்கான மின் அதிர்ச்சி அறிவிப்பு!
சென்னை:மின் தடையால் இருண்ட மாநிலமாக மாறிவரும் தமிழகத்தில் புதிய மின்கட்டண உயர்வு மூலம் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது ஆளும் அ.இ.அ.தி.மு.க அரசு. ஏற்கனவே பேருந்து கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றால் அவதிக்குள்ளாகும் மக்களை வாட்டும் விதமாக வெளியாகியுள்ள இக்கட்டண உயர்வு ஒரு வருடத்திற்காம். இந்த கட்டண உயர்வு வரும், ஏப்ரல் 1- முதல் அமலுக்கு வருகிறது.
வெள்ளி, மார்ச் 30, 2012
12 ஆண்டு துயர வாழ்க்கையின் இறுதியில் ஃபக்ரா உயிரை மாய்த்தார்!
ரோம்:முன்னாள் கணவர் ஆசிட் வீசியதன் மூலமாக முகம் கோரமாகி 12 ஆண்டுகள் துயரத்தில் வாழ்க்கையை கழித்து வந்த முன்னாள் பாக்.நடன மங்கை ஃபக்ரா யூனுஸ் தற்கொலைச் செய்துள்ளார். இத்தாலியில் அவர் வசித்து வந்த ஃப்ளாட்டின் ஆறாவது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துள்ளார். பாகிஸ்தானில் சட்டம் கடைப்பிடித்த குற்றகரமான மவுனம் தன்னை தற்கொலைக்கு நிர்பந்தித்ததாக ஃபக்ரா தற்கொலைச் செய்யும் முன் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ராகிங்:முஸ்லிம் மாணவன் பலி!
பெங்களூர்:கல்லூரியில் சீனியர் மாணவர்களின் வெறித்தனமான ராகிங்கில் உடலில் தீப்பற்றி சிகிட்சைப் பெற்றுவந்த கேரளாவைச் சார்ந்த முஸ்லிம் மாணவன் மரணமடைந்துள்ளார். கேரளா மாநிலம் கண்ணூரைச் சார்ந்த ஹாரிஸ்-ஸவ்தத் தம்பதியினரின் மகன் அஜ்மல்(வயது17). இவர் கர்நாடகா மாநிலம் சிக்காபல்லாபூர் ஸாஷிப் கல்லூரியில் முதல் வருட ஏரோநாட்டிகல் எஞ்சீனியரிங் மாணவர் ஆவார்.
சேது கால்வாய்:சதிகாரர்களுக்கு சாதகமாக மத்திய அரசு முடிவு எடுக்க கூடாது – தி.மு.க எம்.பிக்கள் கோரிக்கை!
புதுடெல்லி:தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் சேதுகால்வாய் திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் சிலரின் சதிக்கு சாதகமாக மத்திய அரசு முடிவு எடுத்தால் அது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் எதிராக அமைந்துவிடும் என்று தி.மு.க எம்.பிக்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
ரூ. 1.34 கோடி சம்பளத்தில் அலகாபாத் என்ஜினியரிங் மாணவருக்கு பேஸ்புக்கில் வேலை !!
சமூக இணையதளங்களில் மிகவும் பிரபலமான பேஸ்புக் இணையதளம், ரூ. 1.34 கோடி ஆண்டு சம்பளத்திற்கு அலகாபாத் என்ஜினியரிங் மாணவரை பணிக்கு எடுத்திருக்கிறது. இந்திய அளவில் எந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவரும் இந்த அளவு அதிக சம்பளம் பெற்றதில்லை.
இதுகுறித்து மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கழகத்தின் (MNNIT) இயக்குனரான பி சக்கரவர்த்தி
திருச்சி கே.என்.நேரு தம்பி ராமஜெயத்தின் கொலை நடந்தது ஏன்? திடுக்கிடும் தகவல் !
திருச்சியில் மாஜி தி.மு.க., அமைச்சர் நேருவின் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது. திருச்சி முழுவதும் தனக்கென ஒரு பெரும் செல்வாக்கு கொண்ட அமைச்சரின் தம்பி கொல்லப்பட்டிருப்பதால் இவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இவரது கொலையை தொடர்ந்து பதட்டத்தை தணிக்கவும், மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்கவும் போலீசார் மாவட்டம் முழுவதும்
மாவோயிஸ்ட்களின் மூன்று முக்கிய கோரிக்கைகள் நிறைவேறினால் இத்தாலி பிணைக்கைதி விடுதலை?
மாவோயிஸ்ட்களின், 13 நிபந்தனைகளில் மூன்றை நிறைவேற்றினால் கூட, அவர்கள் பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ள இத்தாலியரை விடுவித்து விடுவர்' என, மாவோயிஸ்ட்களால் அரசுடன் பேச்சு நடத்த நியமிக்கப்பட்டுள்ள, மத்தியஸ்தர்கள் சர்மா மற்றும் தண்டபாணி மொகந்தி கூறியுள்ளனர்.
புவனேஸ்வரில், நிருபர்களிடம் பேசிய அவர்கள் மேலும் கூறியதாவது:மாவோயிஸ்ட்களால் கடத்திச் செல்லப்பட்ட, இத்தாலிய சுற்றுலா பயணியை விடுவிப்பதில், ஒடிசா அரசு மெத்தனமாக செயல்படுகிறது. மாவோயிஸ்ட்களின் கோரிக்கை தொடர்பாக, எந்த விதமான உருப்படியான பதிலும் அளிக்கப்படவில்லை. அவர்களின், 13 நிபந்தனைகளில் மூன்றை நிறைவேற்றினால் கூட, பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ள, இத்தாலிய சுற்றுலா பயணியை
வியாழன், மார்ச் 29, 2012
ஈரானுடன் உறவை துண்டிக்க மாட்டோம் – ப்ரிக்ஸ் நாடுகள்அறிவிப்பு !
புதுடெல்லி:அமெரிக்காவும், ஐரோப்பாவும் தடை ஏற்படுத்தியுள்ளன என்ற காரணத்தால் ஈரானுடன் உறவை துண்டிக்கமாட்டோம் என்று ப்ரிக்ஸ் நாடுகள் அறிவித்துள்ளன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ப்ரிக்ஸின் உச்சி மாநாட்டிற்கு முன்னோடியாக டெல்லியில் நேற்று நடந்த ப்ரிக்ஸ் நாடுகளின் வர்த்தக
முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் வெட்டிக்கொலை !
திருச்சி:திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் கல்லணையை அருகே திருவளர்ச்சோலை புதர் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை வழக்கம் போல அவர் வாக்கிங் போனார். ஆனால் நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நூற்றுக்கணக்கான திமுகவினர்
மீண்டும் ஜெயாவின் ஹிந்துத்துவா பாசிசம்: ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டுமாம்!
சென்னை:ராமர் பாலத்தை(?) தேசிய சின்னமாக அறிவிக்கவேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலில் பா.ஜ.கவினரையே அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் கரசேவைக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று பேசியவர் தமிழக முதல்வராக பதவி வகிக்கும் ஜெயலலிதா.
எங்களுக்கு கூடங்குளத்துல இருந்துதான் கரண்ட் வேணும் !
இந்த வருடத்தில் பண முதலைகள் ஏழைகளிடம் இருந்து பணத்தை சுரண்டுவதற்கான மற்றொரு வாய்பு தொடங்க இருக்கிறது. ஐ.பி.எல் என்ற சூதாட்டப் போட்டியே அது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் அன்றாட சோற்றுக்கே வழியில்லாமல் திண்டாடிக்கொண்டிருக்க ஐ.பி.எல் போட்டி மிக அவசியமான ஒன்றுதான். இப்போட்டிக்காக வீரர்கள் ஏழம் விடப்படுவதும், விளம்பரம் என பல்வேறு தரப்புகளில் பணம் புகுந்து விளையாட இருக்கிறது.
சவூதி அரேபிய துணை தூதர் ஏமன் நாட்டில் கடத்தப்பட்டு, சுட்டுக்கொலை !
ஏமன் நாட்டில் சவூதி அரேபிய துணை தூதர் மர்ம நபர்களால் கடத்திச்செல்லப்பட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். ஏமன் நாட்டின் தெற்கு மாகாணமான ஏடன் துறைமுகம் பகுதியில் மன்சவுரா நகரில் சவூதி அரேபியா துணைத்தூதர் அப்துல்லா-அல்-காலி்த், இவர் தனது காரில் பணி நிமித்தமாக காரில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது வாகனம் ஒன்றில் வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால்
வீடுகளை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் ரூ.50,000 அபராதம். சட்டதிருத்தம் கொண்டுவர தமிழக அரசு முடிவு !
கொசுவினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில், புதிய சட்ட திருத்தம் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன் படி வீடுகளை சுத்தமாக வைத்திருக்காவிடில் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். பல்வேறு நோய்களுக்கு மூல காரணம் சுகாதார சீர்கேடுகள் தான். மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, யானைக்கால் போன்ற நோய்கள் கொசுக்கள் மூலமே பரவுகின்றன. குப்பைகள், சாக்கடை நீர் போன்றவற்றில் இருந்து தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே
புதன், மார்ச் 28, 2012
ஷேக் கர்ளாவிக்கு விசா மறுப்பு: பிரான்சிற்கு கடும் எதிர்ப்பு !
தோஹா:உலக புகழ்ப்பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவிக்கு விசா மறுத்த பிரான்சின் நடவடிக்கைக்கு சர்வதேச இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தீவிர கருத்துக்களுக்கு எதிரான கொள்கையை உடைய கர்ளாவியை பிரான்சில் நுழைய அனுமதிக்காதது வருத்தத்திற்குரியது என்று இண்டர்நேசனல் யூனியன் ஆஃப் முஸ்லிம் ஸ்காலர்ஸ் பொதுச்செயலாளர் ஷேக் அலி அல் கரதாகி
ஆஸி.க்கு சொந்தமான கோக்கோஸ் தீவில் கடற்படை தளம் அமைக்கிறது அமெரிக்கா !
வாஷிங்டன்: இந்தியப் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கோக்கோஸ் தீவில் ஆளில்லா வேவு விமான தளத்துடன் கூடிய பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமைக்க அந்நாடு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆஸ்திரேலியா பயணத்தின் போது இருநாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன் ஆஸ்திரேலியாவின் டார்வின் தீவில் அமெரிக்க படைகளை
போர் பீதியாலும், தடையாலும் தளராத ஈரான் மக்கள் !
டெஹ்ரான்:அணுசக்தி திட்டத்தின் பெயரால் ஏற்பட்ட கடுமையான தடைகளோ, இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்ற பீதியோ ஈரான் மக்களை தளரச் செய்யவில்லை. டெஹ்ரான் உள்பட ஈரான் நகரங்களில் மக்களின் மாமூல் வாழ்க்கையை இவை எதுவும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பாராசீக புதுவருடத்தை வரவேற்கும் மகிழ்ச்சியில் அவர்கள் இருந்தார்கள். புதிய நெருக்கடியும் தாமதிக்காமல் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையும்
ஐ.நா மனித உரிமை பேரவையுடனான உறவைத் துண்டித்தது இஸ்ரேல் !
ஜெனிவா: இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஐ.நா. மனித உரிமைப்புடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் உரிமையை அபகரிக்கும் வகையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றனவா? என்பது குறித்து சர்வதேச அளவிலான விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
எம்கியூஎம் கட்சித் தலைவர் படுகொலை. கராச்சியில் வன்முறை !
பாகிஸ்தானிலுள்ள எம்கியூஎம் கட்சித் தலைவர் உள்பட 2 பேரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். வன்முறைச் சம்பவங்களில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர். கராச்சியின் பிஐபி காலனி பகுதியில் முத்தாஹித கெüமி இயக்க (எம்கியூஎம்) கட்சித் தலைவர்களுள் ஒருவரான மன்சூர் முக்தரின் வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை காலை புகுந்த மர்ம நபர், முக்தரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதைத் தடுக்க வந்த முக்தாரின் சகோதரரையும் அவர் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பியோடினார். இந்த சம்பவத்தில் முக்தாரின் மைத்துனி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் கராச்சி நகரில் காட்டுத் தீ போல பரவியது. சம்பவம் பற்றி அறிந்ததும் எம்கியூஎம் கட்சித் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர். கராச்சி நகரில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வேனுக்கு தீவைத்தனர். அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும்
ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு பாஸ்போர்ட் சேவை !
இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள ஹஜ் பயணிகளுக்காக பாஸ்போர்ட் அலுவலக சிறப்பு முகாம், வரும் மார்ச் 31ம் தேதி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள மூன்று சேவை மையங்களில் ஒன்றான சென்னை, சாலிகிராமம், டாக்டர் பானுமதி ராமகிருஷ்ணா சாலையில் உள்ள பாஸ்போர்ட் உதவி மையத்தில், வரும் 31ம் தேதி காலை, 9.30 மணி முதல், மதியம், 2 மணி வரை, ஹஜ் பயணிகளுக்காக பாஸ்போர்ட் சிறப்பு முகாம் நடக்கிறது விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதள விண்ணப்பத்துடன், மாநில ஹஜ் குழுவின்
செவ்வாய், மார்ச் 27, 2012
ஆபாசப் படங்கள்... அல்லாடும் பெண்கள்.. பெண்களை நோக்கி திரும்பியுள்ள டிஜிட்டல் உலகத்தின் கழுகு. கட்டாயம் பார்க்க வேண்டிய கட்டுரை.
சராசரி வாரத்திற்கு நான்கு செய்திகளாவது இப்படி வந்து விடுகின்றன. "பெண்ணை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய வாலிபர் கைது" என்று. இந்த அயோக்கியத்தனத்தை படித்த, படிக்காத என்று அனைவரும் பாகுபாடின்றி செய்கின்றனர்.
"கையில் கைபேசி இருந்தால் போதும்". ஊடகங்களே இந்த காரியங்களை செய்யும்போது - சாமானியன் செய்ய மாட்டானா? இதில் சிக்கும் பெண்களுக்கும் - படித்த, படிக்காத என்கிற வேறுபாடில்லை. "படிக்காததால் ஏமாற்றப்படுகின்றனர்" என்பதெல்லாம் இனி வருங்காலங்களுக்கு பொறுந்தாதோ.
மஹாராஷ்டிரா:நக்சல் தாக்குதலில் 16 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பலி
மும்பை/கட்சிரோலி :மஹாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சல்கள் இன்று நிகழ்த்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ்(சி.ஆர்.பி.எப்) படையைச் சேர்ந்த 16 வீரர்கள் உயிரிழந்தனர்.
நக்சல் ஆதிக்கம் நிறைந்த சட்டீஸ்கர் மாநில எல்லைப் பகுதி அருகே உள்ள கட்சிரோலி மாவட்டத்தில், சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பயணம் செய்த பேருந்தை வெடிக்கச் செய்து, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)