செவ்வாய், மார்ச் 27, 2012

அவுரங்காபாத்:முஸ்லிம் இளைஞர் என்கவுண்டரில் படுகொலை!


அவுரங்காபாத்:அவுரங்காபாத்தில் மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2008-ஆம் ஆண்டு அஹ்மதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டப்பட்ட நபர் கொல்லப்பட்டதாக போலீஸ் கூறுகிறது. இவருடைய இரண்டு கூட்டாளிகளை கைது செய்ததாக போலீஸ் கூறுகிறது.

அவரங்காபாத்தில் குல்மோகன் காலனியைச் சார்ந்த கலீல் என்கவுண்டரில் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். ஹிமாயத்பாக் பகுதியில் உத்தவ் ராவு பாட்டீல் சவுக்கில் இந்த என்கவுண்டர் நிகழ்ந்துள்ளது.
முஹம்மது ஷபீர், அப்ரார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவருக்கு பா.ஜ.க உறுப்பினர் கொலையில் தொடர்பு இருப்பதாக போலீஸ் கூறுகிறது. தீவிரவாத எதிர்ப்பு படையைச் சார்ந்த ஷேக் ஆரிஃபிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக என்கவுண்டரில் போலீஸ் கூறும் கதை என்பதால் இதன் உண்மை நிலை என்ன? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக