செவ்வாய், மார்ச் 20, 2012

பினாயக்சென்னை தடுக்க முயன்ற சங்க்பரிவார குண்டர்கள்

Binayak Sen
  கொச்சி:’ஆரோக்கிய உரிமை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த மனித உரிமை ஆர்வலர் டாக்டர்.பினாயக்சென்னை சங்க்பரிவார மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியின் உறுப்பினர்கள் தடுக்க முயன்றது சட்டக்கல்லூரியில் சலசலப்பை உருவாக்கியது. போலீஸார் வந்து நிலைமையை அமைதிப்படுத்தினர்.
‘பினாயக் சென் வெளியேறு!’ என்று கோஷமிட்டு வந்தே மாதரம் என கூச்சலிட்ட ஏ.பி.வி.பியினர் நிகழ்ச்சி நடக்கும் ஹாலில் ஜன்னல் வழியாக காகிதங்களை சுருட்டி வீசினர். மாவோயிஸ்ட் என்றும் தேசத்தை காட்டிக் கொடுத்தவர் என்றும் தேசப்பக்தியில்(?) ஊறிப்போன ஏ.பி.வி.பியினர் பினாயக் சென்னை தடுக்க முயன்றனர். கருத்தரங்கை சீர்குலைக்க முயன்ற ஏ.பி.வி.பியினரை போலீஸார் வெளியேற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக