ஹஜ் குழுவின் நிர்வாகச் செலவினங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத் தொகையை பத்து லட்ச ரூபாயிலிருந்து இருபது லட்ச ரூபாயாக இந்த அரசு உயர்த்தி ஆணையிட்டுள்ளது. 2012‑2013 ஆம் ஆண்டும், உயர்த்தப்பட்ட இதே அளவில், மானியத் தொகை வழங்கப்படும்.
உலமாக்களின்(முஸ்லிம் அறிஞர்களின்) மாத ஓய்வூதியம் 750 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2012-2013 ஆம் ஆண்டில் உலமாக்களின் நலவாரியத்திற்கு உதவி தொகையாக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டைப் போன்றே 2012-2013 ஆம் ஆண்டிலும் கிருத்துவர்கள் ஜெருசல நகரத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்துவேன் என அறிவித்திருந்தார். ஆனால், அதைப்பற்றிய தகவல் எதுவும் பட்ஜெட்டில் கூறப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக