ஞாயிறு, மார்ச் 18, 2012

2014-ல் சட்டசபை தேர்தல்: மராட்டியத்தில் சிவசேனா ஆட்சியை பிடிக்கும்- உத்தவ்தாக்கரே நம்பிக்கை.!


சிவசேனா கட்சியின் செயல் தலைவர் உத்தவ் தாக்கரே பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- 
சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சிவசேனாவுக்கு கணிசமான வெற்றிகள் கிடைத்தன. மும்பை மற்றும் தானே மாநகராட்சிகளை சிவசேனா கைப்பற்றியது. இது 2014-ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் கிடைக்கப் போகும் வெற்றிக்கு ஒரு அச்சாரம் ஆகும். 
மராட்டிய சட்டசபை தேர்தலில் எங்கள் அணி பெருவாரியாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எனது நண்பர்தான். ஆனால் அவர் ஒரு சுய நல அரசியல்வாதி ஆவார். அவரது அரசியல் வழிமுறை மிகவும் மோசமானது. 
நாசிக் மேயர் தேர்தலில் சரத்பவார் எங்கள் முதுகில் குத்திவிட்டார். காங்கிரசின் சதியில் அவர் விழுந்து விட்டார். அவருக்கு சரியான பாடம் புகட்டுவோம். இவ்வாறு உத்தவ்தாக்கரே கூறினா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக