சனி, மார்ச் 31, 2012

காஸ்மி:ஜாமீன் மனு மீது இன்று விசாரணை!


  புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் ஸய்யத் முஹம்மது அஹ்மத் காஸ்மி டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். ஜாமீன் மனுவை ஏற்றுக்கொண்ட முதன்மை மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் இம்மனு மீது இன்று விசாரணை நடத்துகிறார்.
தனக்கு எதிரான போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணை பூர்த்தியானதாக கூறி காஸ்மி ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றம் கூறுகிறது.

தான் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள போலீஸ் தன்னை கட்டாயப்படுத்தியதாகவும், மொஸாத் போன்ற வெளிநாட்டு ஏஜன்சிகள் தன்னிடம் விசாரணை நடத்தியதாகவும் முன்னர் காஸ்மி குற்றம் சாட்டியிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக