செவ்வாய், மார்ச் 20, 2012

அகதி முகாமுக்குள் காவல் நாய்கள் மூலம் தேடுதல் வேட்டை

அல்-ஹலீல்: கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.03.2012) அதிகாலை அல்- ஹலீல் பிராந்தியத்தின் ஃபவார் அகதி முகாமைத் திடீரெனத் தாக்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, தேடுதல் வேட்டை என்ற பெயரில்  முகாமுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. இதன்போது, ஆக்கிரமிப்புப் படை காவல் நாய்களையும் அகதி முகாமுக்குள் விட்டு அங்கிருந்த பெண்களையும் குழந்தைகளையும் அச்சுறுத்தியுள்ளது.


அகதி முகாம் மீது தாக்குதல் நடாத்துமுன், ஆக்கிரமிப்பு இராணுவம் அப்பிரதேசத்தில் பாதைத் தடையொன்றை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விசாரணை என்ற பெயரில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை முகாமுக்குள் செய்த அட்டூழியங்கள் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு முற்றிலும் எதிரானதாகும் என அகதி முகாமில் உள்ள பலஸ்தீன் பொதுமக்கள் மனம் குமுறுகின்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக