ஞாயிறு, மார்ச் 18, 2012

சட்டவிரோத சுரங்க ஊழல்: எடியூரப்பா 20-ந் தேதி ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு சம்மன்


கர்நாடகத்தில் எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்த போது சுரங்க முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. சில தனியார் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக சுரங்க அனுமதி அளித்ததாகவும், அதற்கு பிரதிபலனாக எடியூரப்பா குடும்பத்தினர் நடத்தும் டிரஸ்ட் கோடிக்கணக்கில் ஆதாயம்     அடைந்ததாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் சமாஜ சாமு தயா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த முறைகேடு பற்றி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மத்திய அதிகார குழு ஒன்றை நியமித்தது. இந்த குழு எடியூரப்பாவை வருகிற 20-ந் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது. அன்று எடியூரப்பாவோ அல்லது அவர் சார்பில் பிரதிநிதியோ ஆஜராகலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

எடியூரப்பா குடும்பத்தினர் நடத்தும் பிரேரனா டிரஸ்ட், தவளகிரி எண்டர் பிரைசஸ் நிறுவனங்கள் ஆதாயம் அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதே போல் அதானி எண்டர் பிரைசஸ் நிறுவனம் 5.5 லட்சம் டன் இரும்பு தாதுக்களை தென் கன்னட மாவட்டத்தில் உள்ள பெலி கேரே துறைமுகம் வழியாக சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்து இருப்பதாகவும் வழக்கில் கூறப்பட்டுள்ளது. 

இதில் சுப்ரீம் கோர்ட்டு குழு அளிக்கும் அறிக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்று கோர்ட்டு கூறியது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக