வெள்ளி, ஜூன் 28, 2013
'டைம்' இதழில் மியான்மர் பயங்கரவாதத்தின் முகம்!
ரோஹிங்யா இன முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மர் (பர்மா) நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறை, இனக்கலவரத்தை முன்னின்று நடத்தும் விராது என்ற புத்தபிக்குவின் முகம் அமெரிக்காவின் 'டைம்' இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு குறிப்பிட்ட டைம் இதழுக்கு மியான்மர் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வியாழன், ஜூன் 27, 2013
உத்தரகாண்ட்: மோடி "ராம்போ" கிடையாது! பா.ஜ.க பல்டி!
லக்னோ:உத்தரகண்ட் வெள்ளத்தில் இருந்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்து 15 ஆயிரம் பேரைக் காப்பாற்றி அழைத்துச் சென்றதாக மோடி ஒருபோதும் கூறவில்லை என பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இயற்கை சீற்றத்திலும் ஆதாயம் தேட முயலும் மோடிக்கு எதிராக கடுமையாக விமர்சனங்கள்எழுந்துள்ள நிலையில் பா.ஜ.க, மோடி அவ்வாறு கூறவில்லை என்று பல்டியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாலேகான்:முஸ்லிம்களை குற்றவாளியாக சேர்த்த அதிகாரிகள் மீது பொது நல வழக்கு!
புதுடெல்லி: 2006 ஆம் ஆண்டு மாலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதுச் செய்த அதிகாரிகள் மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை மறு விசாரணைச் செய்த தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து ஒரு மாதம் முடியும் வேளையில், இவ்வழக்கில் அநியாயமாக முஸ்லிம் இளைஞர்களை குற்றவாளிகளாக சேர்த்த புலனாய்வு அதிகாரிகள் மீது செய்யது முஸ்தபா அமீன் என்ற நபர் பொது நல மனுவை அளித்துள்ளார்.
புதன், ஜூன் 26, 2013
கத்தார் மன்னர் பதவி விலகினார் : புதிய மன்னரானார் இளவரசர்!
வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் மன்னர் ஷேக் பின் கலிஃபா அல்-தானி (Sheikh Bin Khalifa al-Thani) பதவி விலகியுள்ளார். தலைநகர் தோகாவில் தமது குடும்பத்தினருடன் ஆலோசித்த அவர், ஆட்சிப் பொறுப்பை தமது மகனும் இளவரசருமான ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி (Sheikh Tamim bin Hamad al-Thani)-யிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.
சித்திரவதை எதிர்ப்பு தினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தர்ணா!
புதுடெல்லி: சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினமான வருகிறது ஜூன் 26-ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா நடத்தவிருக்கிறது. ’Say no to death penalty’ (மரணத்தண்டனையை ஒழிப்போம்) என்பது இவ்வருட சித்திரவதை எதிர்ப்பு தின பாப்புலர் ஃப்ரண்டின் முழக்கமாக இருக்கும் என்று தேசிய பொதுச் செயலாளர் ஒ.எம்.அப்துல் ஸலாம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். ஜந்தர் மந்தரில் நடக்கும் தர்ணா போராட்டத்தை தேசிய செயற்குழு உறுப்பினர் இ.எம்.அப்துல் ரஹ்மான் துவக்கி வைக்கிறார். சிறைகளிலும், போலீஸ் கஸ்டடிகளிலும் நிரபராதிகள் அனுபவித்துக் கொண்டிருக்கும் கொடுமைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்போம்.போலீஸ்
காட்டுத்தீயால் காற்றில் ஏற்பட்ட மாசு கலப்பினால் மன்னிப்பு கோரிய இந்தோனேசியா ஜனாதிபதி!
இந்தோனேசியாவைச் சேர்ந்த சுமத்ரா தீவுகளில் ஆண்டுதோறும் வறட்சிக் காலத்தில் பனை எண்ணெய்க்காகப் பயிரிடுபவர்கள் நிலத்தை சுத்தம் செய்வதற்காக எரிப்பது வழக்கம். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய இச்செயலினை அரசு தடை செய்திருந்த போதிலும் சட்டத்துக்கு விரோதமாக இத்தகைய செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
திங்கள், ஜூன் 24, 2013
கோத்ரா சம்பவம்:விசாரணை நடத்திய நீதிபதி யு.சி.பானர்ஜியை கொலைச் செய்ய முயன்ற ஹிந்துத்துவா தீவிரவாதிகள்!
புதுடெல்லி: குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைக்கு காரணமான கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தில் எரிபொருளை முஸ்லிம்கள் வெளியே இருந்து ஊற்றவில்லை,ரெயிலுக்கு உள்ளேயிருந்தே ஊற்றப்பட்டுள்ளது என்று கண்டுபிடித்த நீதிபதி யு.சி. பானர்ஜியை ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி கொலைச் செய்ய திட்டமிட்டிருந்தான் என்று சாட்சி ஒருவர் கூறியதாக 2006 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றப்பத்திரிகையில் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கூறுகிறது.
மோடியின் காசுக்கு விலை போகும் பத்திரிக்கைகள்!
இன்றைய மாலை மலர் இணையதளத்தில்"உத்தரகாண்டில் தவித்த 15,000 குஜராத் பக்தர்கள் மீட்பு" என்ற தலைப்பில் ஒரு செய்தி. உத்தரகாண்ட் இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் இராணுவமும் தன்னார்வலர்களும் படாதபாடு பட்டுக்கொண்டிருப்பதாக செய்திகள் நேரடிக் காட்சிகளாகவே வந்துகொண்டிருக்கும் நிலையில், ஒரேயடியாக குஜராத்தைச் சேர்ந்த 15,000 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சொந்த இடம் அழைத்து வரப்பட்டதான அச்செய்தி மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது.
சனி, ஜூன் 22, 2013
மலிவு விலை குடிநீர்! அம்மாவின் அடுத்த(து) அதி(ரெ)ரடி!
சென்னை : தமிழகத்தில் மலிவு விலை சிற்றுண்டி, மலிவு விலை காய்கறி திட்டத்தின் தொடர்ச்சியாக மலிவு விலை குடிநீர் திட்டத்தை முதல்வர் ஜெ., தலைமையிலான அதிமுக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக மக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்க குறைந்த விலையில் தரமான மினரல் வாட்டர் வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆரம்ப கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்படுகிறது.
காந்தியைக் கொல்வோம்! பரபரப்பினை ஏற்படுத்திய புதிய நூல்!
காந்தியின் கொள்ளுப் பேரன் துசார் காந்தி எழுதிய காந்தியைக் கொல்லுவோம் என்கிற நூல் சமீபத்தில் பரபரப்பினை உண்டாக்கிய ஒன்று. இந்நூலினை, தான் எழுதிய காரணம் பற்றி துசார் காந்தி அவர்கள் குறிப்பிடும்பொழுது, சமீப காலங்களில் இந்துத்துவ போன்ற அமைப்புகள் திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தினைச் செய்து வருகிறார்கள். காந்தி கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி வருகிறார்கள். கோட்சேவை ஒரு வீரப் புருஷனாகச் சித்தரித்து வருகின்றனர்.
வெள்ளி, ஜூன் 21, 2013
துபாயில் குர்ஆனை விவரிக்கும் பூங்கா விரைவில் திறக்கப்படும்!
துபாய் அரசு தனது நீண்ட நாள் லட்சியமான குர்ஆனின் காட்சிகளை விவரிக்கும் பூங்கா ஒன்றினை அமைக்கும் எண்ணத்தைச் செயல்படுத்தத் துவங்கியுள்ளது. 7.3 மில்லியன் டாலர் திட்ட மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்படும் இந்தப் பூங்காவில் உள்ள தோட்டத்தில், குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் இயற்கைத் தாவரங்கள் அனைத்தும் வளர்க்கப்படும்.
ஸ்மார்ட்போன்களை அன்லாக் செய்ய மின்னணு மோதிரம் அறிமுகம்!
ஸ்மார்ட்போன்களை அன்லாக் (Unlock) செய்வதற்குப் பயன்படும் மின்னணு மோதிரம் ஒன்றை சீனாவைச் சேர்ந்த ஷாண்டா (Shanda) என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மோதிரத்தை அணிந்து கொள்வதன் மூலம், ஸ்மார்ட்போன்களை பாஸ்வேர்ட் மூலம் அன்லாக் (Unlock) செய்வதற்குப் பதிலாக, மோதிரத்தை அருகில் கொண்டு சென்று அழுத்துவதன் மூலம் அன்லாக் (Unlock) செய்ய முடியும். ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தைப் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் மட்டும் இந்த மோதிரம் இப்போதைக்கு செயல்படும்.
அமெரிக்காவும், ரஷ்யாவும் அணு ஆயுதங்களை குறைக்கவேண்டும் -ஒபாமா!
பெர்லின்: ரஷியா சம்மதித்தால் அணு ஆயுதங்களை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். ஜெர்மனி சென்றுள்ள ஒபாமா அங்குள்ள ஜெர்மனியை இரண்டாக பிரித்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிராண்டன்பர்க் கேட் பகுதியில் அரசு அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது: அணு ஆயுதங்களைக் குறைப்பது தொடர்பாக உலக நாடுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருகிறது. இன்றைய சூழ்நிலையில் நாம் பாதுகாப்பாக இல்லை என்பதுதான் உண்மை.
இந்தோனேசியா காட்டுத் தீ புகையால் சிங்கப்பூர் நகர மக்கள் பாதிப்பு!
இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் கடந்த ஒரு வார காலமாக எரிந்து வரும் காட்டுத் தீக்கு சிங்கப்பூர் நகரம் புகையால் சூழப்பட்டுள்ளது. இதனால் காற்று மண்டலம் மாசு அடைந்து அங்குள்ள மக்கள் மூச்சுத் திணறல் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது சட்ட விரோத காட்டுத் தீ என சிங்கப்பூர் கருதுவதினால் இந்த இரு நாடுகளிடையே உரசல் ஏற்பட்டுள்ளது.
வியாழன், ஜூன் 20, 2013
மாநிலங்களவைத் தேர்தல் -திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு ஏன்?
மாநிலங்களவைத் தேர்தல் - திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு! திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை சந்தித்து ம.ம.க. நிர்வாகிகள் ஆதரவைத் தெரிவித்தார்கள். தமிழ்நாட்டில் வரும் ஜூன் 27 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் கனிமொழிக்கு ஆதரவு அளிக்க மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக் குழு முடிவு செய்து அறிவித்துள்ளது.
பீகார்: நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வெற்றி!
பாஜக கூட்டணி விலகலையடுத்து பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள அரசு பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றது. 17 ஆண்டுகளாக, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டணியில் இருந்து விலகியது.
புதன், ஜூன் 19, 2013
இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசிய தீவிரவாத ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவன்!
இந்துத்துவாவின் மூலமாகவே நாட்டை முன்னேற்ற பாதைக்கு மாற்றமுடியும் என பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவன் மோகன்பகவத் கூறியுள்ளான். மீரட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பயங்கவாதி மோகன்பகவத், யாருக்கும் பிடித்தாலும், யாருக்கு பிடிக்கா விட்டாலும் இந்துத்துவா ஒன்று தான் ஒரேவழி என்று இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசியுள்ளான்.
செவ்வாய், ஜூன் 18, 2013
முஸ்லிம்களை ஏமாற்ற ஜூன் 23-இல் பா.ஜ.க நடத்தும் மாநாடு!
புதுடெல்லி: குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை, பாபரி மஸ்ஜித் இடிப்பு என்று முஸ்லிம்களின் உயிர், உடைமைகள், வழிப்பாட்டுத்தலங்களை அழித்து தொடர்ந்து அவர்களுக்கு எதிராக சதித்திட்டங்களை அரங்கேற்றி வரும் பாசிஸ்டுகளின் பாசறையில் உருவான அரசியல் கட்சி பா.ஜ.க. இக்கட்சி தேர்தல் நேரங்களில் முஸ்லிம்களை ஏமாற்ற முயற்சிப்பது வழக்கம். அவ்வகையில் வருகிற மக்களவை தேர்தல் மற்றும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலையொட்டி டெல்லியில் ஜூன் 23-ஆம் தேதி முஸ்லிம் மாநாட்டை நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாம். இத்தகவலை பா.ஜ.கவில் முஸ்லிம் பெயர் தாங்கியான ஷாநவாஸ் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.
திங்கள், ஜூன் 17, 2013
பாப்புலர் ஃபிரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் கலந்துகொண்ட மலேசியாவில் நடைபெற்ற "இஸ்லாத்திற்கு எதிரான சதியும்! முஸ்லிம்களின் நிலையும்! கருத்தரங்கம்
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று (16/06/13) "இஸ்லாத்திற்கு எதிரான சதியும் முஸ்லிம்களின் நிலையும்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இஸ்லாமிய நற்பணி மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் பாப்புலர் ஃபிரண்டின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஷாஜஹான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
சனி, ஜூன் 15, 2013
இந்தியாவின் முதல் அதிகாரபூர்வ பாசிஸ்ட் நரேந்திர மோடி : ஜெய்ராம் ரமேஷ்
புது டெல்லி : இந்தியாவின் முதல் அதிகாரபூர்வ பாசிஸ்ட்டான நரேந்திர மோடி காங்கிரசுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் சவாலாக இருப்பார் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் மத்திய மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
நரேந்திர மோடிக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டோம் - எல்.கே அத்வானி!
புதுடெல்லி: பிரதம வேட்பாளராக அறிவிக்க நரேந்திர மோடிக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டோம் என்று எல்.கே அத்வானி கூறியுள்ளார். பீகாரில் நிதிஷ்குமார் அரசு பா.ஜ.க வுடனான கூட்டணி முறிவு அறிவிப்பை நாளை நிதிஷ்குமார் வெளியிட திட்டமிட்டுள்ளார். இதனால் பாரதீய ஜனதா இல்லாமல் சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சியில் நீடிக்க நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளார். ஆனால் இந்த கூட்டணி முறிவதை பாரதீய ஜனதா தலைவர்கள் விரும்ப வில்லை. இதையடுத்து பாரதீய ஜனதா தலைவர்கள் நிதிஷ்குமாருடன் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அத்வானி நிதிஷ்குமாருடன் தொடர்பு கொண்டு "நரேந்திர மோடி பாரதீய ஜனதாவின் தேர்தல் பிரசார குழு தலைவராகத்தான் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வில்லை" என்பதை எடுத்துக் கூறினார். அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கட்சி
சம்ஜோதா எக்ஸ்பிரஸ்:வெடிக்குண்டுகளை ரெயில்வே பயணிகள் ஓய்வறையில் தயார் செய்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்!
புதுடெல்லி: 68 அப்பாவி மக்களின் மரணத்திற்கு காரணமான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட வெடிக்குண்டுகளை ரெயில்வே பயணிகள்ஓய்வறையில்(Dormitory) வைத்து தயார் செய்துள்ளனர்.இத்தகவலை நேற்று முன் தினம் தேசிய புலனாய்வு ஏஜன்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது.
வியாழன், ஜூன் 13, 2013
என்.டி.ஏவுக்கு மூடு விழா? புதிய கூட்டணிக்கு ஐக்கிய ஜனதா தளம் அச்சாரம்!
புதுடெல்லி: குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு தேர்தல் பிரச்சாரக் கமிட்டி தலைவர் பதவி வழங்கப்பட்டதை கண்டித்துபா.ஜ.கவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி எழுப்பிய சவால், அக்கட்சியை ஆட்டம் காணவைத்தது. இந்நிலையில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம், கூட்டணியில் வெளியேறி புதிய கூட்டணிக்கான அச்சாரம் போடத்துவங்கியுள்ளது. இதனால் என்.டி.ஏ கலகலத்துப்போகும் என கருதப்படுகிறது. ஏற்கனவே மோடியுடன் மோதலை கடைப்பிடித்து வந்த ஐக்கிய ஜனதா தளம், 17 ஆண்டுகள் பா.ஜ.க உடனான உறவை முறிக்க முடிவுச் செய்துள்ளது. 20 மக்களவை உறுப்பினர்களை கொண்ட என்.டி.ஏவில் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை விட்டு விலகியது பா.ஜ.கவின் கனவுகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளுக்கு இஸ்ரேல் ஆயுத விற்பனை?
பாகிஸ்தானுக்கு அதி நவீன ராணுவத் தளவாடங்களை இஸ்ரேல் வழங்கி வருவதாக பிரிட்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள், நவீன ஆயுதங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ச்சியாக இந்த ஆயுத விநியோகம் நடந்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரீஸ் செய்தி நிறுவனம் மூடல்! : செய்தி நிறுவனமே செய்தியானது!
கிரீஸ் நாட்டில் கடும் நிதி நெருக்கடி காரணமாக அரசுத் தொலைக்காட்சி நிறுவனம் அதிரடியாக மூடப்பட்டுள்ளது. செய்தி வாசித்துக் கொண்டிருந்தபோதே ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டது. இந்த நடவடிக்கையால் சுமார் 2,700 பேருக்கு உடனடியாக வேலை பறிபோனது. கீரிஸ் நாட்டின் தேசிய தொலைக்காட்சி நிறுவனமான ஈ.ஆர்.டி (ERT) நிறுவனத்தின்
கருத்து மோதலினால் கொரிய நாடுகளின் பேச்சு வார்த்தை முயற்சி தோல்வி!
தென் கொரியாவுடன் நல்லுறவை காக்க வட கொரியா அக்கறை காட்ட வேண்டும் என்று தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. சரிசமமான அதிகாரிகளை பேச்சு வார்த்தைக்கு நியமிப்பதில் இரு நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கொரிய நாடுகளுக்கிடையே 6 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும், நாளையும் நடைபெறவிருந்த பேச்சு வார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்-னிற்கு நெருங்கிய மூத்த அதிகாரி தென் கொரியாவிற்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் வேறொரு அதிகாரி வருவார் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)