குவாண்டனாமோ பே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் பெரும்பங்கினர் ஒன்று நிரபராதிகள் என்றோ அல்லது வெறுமனே கீழ் மட்டத்தில் செயல்பட்டவர்கள் என்றோதான் அமெரிக்க அதிகாரிகள் நம்பியிருந்தனர் என்று விக்கிலீக்ஸ் கசியவிட்டுள்ள ஆவணங்கள் காட்டியுள்ளன.
டெய்லி டெலிகிராஃப், வாஷிங்டன் போஸ்ட் போன்ற நாளிதழ்களில் தற்போது வெளிவந்துள்ள ஆவணங்கள், குவாண்டனாமோ பே சிறையில் பல்வேறு காலகட்டங்களிலுமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த எழுநூற்று எண்பது பேர் பற்றி ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட மதிப்பீடுகள் பற்றி தகவல் தருகின்றன.
முன்னர் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களில் சுமார் நூற்று ஐம்பது பேர், நிரபராதிகளாக கருதப்படக்கூடிய ஆப்கானியர்கள் மற்றும் பாகிஸ்தானியர் என்று ஆய்வுகள் மூலம் செய்யப்பட்ட மதிப்பீடுகளில் வருணிக்கப்பட்டுள்ளனர்.