ஞாயிறு, மார்ச் 31, 2013

எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்- கடலூர் இளையராஜா கைது!

  • சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு அடுத்தடுத்து 3 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பரபரப்பை ஏற்படுத்திய நபரை போலீஸார் ராவோடு ராவாக பிடித்து கைது செய்தனர்.

இந்தியா வரும் வெளிநாட்டு பெண்கள் எண்ணிக்கை குறைந்தது!

  • டில்லியில் ‌நடந்த பாலியல் வன்முறையால் வெளிநாட்டு பெண் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்துள்ளதாக டில்லியில் உள்ள தாஜ் குரூப் ஓட்டல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3மாதத்தில் 359 கற்பழிப்பு வழக்குகள் … அதிர்ச்சியில் இளம்பெண்கள் !

  • டெல்லியில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 359 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சனி, மார்ச் 30, 2013

கற்பழிக்கப் படும் கஷ்மீர் தேச பெண்கள் .தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் !


  • கஷ்மீர் அங்கே இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம் , பெண்களை கூட்டு கற்பழிப்பு செய்யலாம் பாடசாலை செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம்,

கோவையில் SDPI கட்சியின் தேசிய பொதுக்குழு கூட்டம் கொடியேற்றத்துடன் துவங்கியது!

  • SDPI கட்சியன் தேசிய பொதுக்குழு கூட்டம் கோவையில் இன்று(30.03.2013) காலை 11 மணியளவில் துவங்கியது.இரண்டு நாட்கள் நடைபெறும் இப்பொதுக்குழு கூட்டத்தின் துவக்கமாக காலை 11 மணிக்கு கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

இலங்கையில் முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீம் நிறுவனங்கள் மீது தாக்குதல் : பாப்புலர் ஃஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம்!

  • இலங்கையில் முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீம் நிறுவனங்கள் மீது தாக்குதல் : பாப்புலர் ஃஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம்
    இலங்கையில் ஆளும் சிங்கள பௌத்த அரசாங்கம் தமிழர்களை தொடர்ந்து முஸ்லீம்களை வேரறுக்க வேண்டும் எனும் நோக்கில் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கெதிராக பள்ளிவாசல் இடிப்பு , ஹலால் முத்திரை நீக்குதல் , முஸ்லிம்களின் கலாச்சார உரிமைகளை மறுக்கும் நோக்கில் ஹிஜாபை தடை செய்தல் பர்தா மற்றும் தொப்பி அணிந்து வரும் முஸ்லீம்களை அச்சுறுத்துதல் என பல்வேறு அச்சுறுத்தும் வேலைகளை செய்து வருகிறது .

    அதன் தொடர்ச்சியாக இலங்கை கொலும்புவில் உள்ள பெபிலியானாவில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான Fashion Bug நிறுவனத்திற்குள் நேற்றிரவு அத்துமீறி நுழைந்து பௌத்தபிக்குகளும், பாசிஸ வெறியர்களும் நிறுவனத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததோடு, அங்கிருந்த ஊழியர்களையும் தாறுமாறாக தாக்கி படுகாயப்படுத்தியுள்ளனர்.

    பௌத்த பிக்குகளால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தாக்குதல் சம்பவங்கள் குறித்த நிறுவனத்தின் CCTV கமெராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனையறிந்த போலிஸார், Fashion Bug நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு CCTV இல் பதிவான வீடியோ காட்சிகளை எந்தவொரு ஊடகத்திற்கும் வழங்க வேண்டாமெனவும், இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டாமெனவும் அச்சுறுத்தியுள்ளதாகவும் , பௌத்த பிக்குகள் மிகவும் கீழ்த்தரமான முறையில் ஊழியர்களை தாக்கும் காட்சிகளும் சேதம்விளைவிக்கும் காட்சிகளும் மிகவும் தெளிவாகவே பதிவாகியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    முஸ்லீம்களை துடைத்தெறிய வேண்டும் எனும் நோக்கில் தொடர்ச்சியாக பல்வேறு அநியாயங்களை செய்து வரும் பாசிஸ சிந்தனை கொண்ட பௌத்த பயங்கரவாதிகளையும் , இன அழிப்பில் ஈடுபட்டுள்ள சிங்கள அரசாங்கத்தையும் வன்மையாக கண்டிப்பதோடு மத்திய அரசு உடனே தலையிட்டு முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது .

    இப்படிக்கு

    ஏ.எஸ்.இஸ்மாயீல்
    மாநில தலைவர்
    பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
    தமிழ்நாடு - 29.03.2013

தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 24 போலி மருத்துவர்கள் கைது!

  • தர்மபுரி மாவட்டத்தில் மருத்துவப்பட்டம் பெறாமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த 24 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்க மத்திய அரசு மறுப்பு!

தனி ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்க முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

வெள்ளி, மார்ச் 29, 2013

மத்திய அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!

  • புதுடெல்லி:தீவிரவாத வழக்குகளில் கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்படும் என்ற மத்திய அரசின் அறிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்றுள்ளது. அதேவேளையில் சிறையில் வாழ்க்கையை வீணடிக்கப்படும் நூற்றுக்கணக்கான

படுகொலை செய்யப்பட்ட அப்சல் குருவின் உடலை வழங்க வலியுறுத்தி காஷ்மீரில் முழு அடைப்பு !

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் கூட்டுமனசாட்சி என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்ட அப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வலியுறுத்தி ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் தைரியமான முதல்வர் யார்?

ஈழத்தமிழர் விசயமாக பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தின் தைரியமான முதல்வர் யார்? கருணாநிதியா? அல்லது  ஜெயலலிதாவா? என்று கேட்டால் ஜெயா என்று தைரியமாக சொல்லி விடலாம். 

ரூ.2000 கோடி வரி ஏய்ப்பு: நோக்கியா நிறுவனத்திற்கு நோட்டீஸ்!

சென்னை: 2, 000 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா நிறுவனத்திற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

உலக கால்பந்து சம்மேளனம் பாலஸ்தீன கால்பந்து விளையாட்டுப் பயிற்சித்திட்டத்திற்கு உதவி !

சுவிட்சர்லாண்டு நாட்டின் ஜுரிச் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, உலக கால்பந்து சம்மேளனம் இயங்கிவருகின்றது. இது ஏற்கனேவே பாலஸ்தீன நாட்டின் அல் ராம் என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் கால்பந்து சங்க தலைமைக் கட்டிடத்திற்கு பொருளுதவி செய்துகொண்டிருக்கின்றது. அந்த நாட்டில் கால்பந்து விளையாட்டினை மேலும் மேம்படுத்தும் வகையில், 4.5 கோடி டாலர் அளிப்பதாக, வியாழன் அன்று, இந்த சம்மேளனம் அறிவித்துள்ளது.

எஸ்.டி.பி.ஐ. தமிழ்நாடு துணைத் தலைவர் ரபீக் ஜித்தா சுற்றுப்பயணம் – தமிழ் வாழ் மக்களை சந்தித்தார்!

ஜித்தா:வளர்ந்து வரும் பிரபல சமூதாய இயக்கமும், மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து போராடிவரும் அரசியல் கட்சியுமான எஸ்.டி.பி.ஐ.யின் தமிழ்நாடு துணைத் தலைவர் ரபீக் முஹம்மது அவர்கள் ஜித்தாஹ் சென்றடைந்தார். அங்கு அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், ஷரபிய்யாஹ்வில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரபீக், “அரசியல் நமக்கு ஏன்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

வியாழன், மார்ச் 28, 2013

பைத்துல் முக்கத்தஸின் தூய்மையை களங்கப்படுத்தும் இஸ்ரேலின் நடவடிக்கையை அரபு உலகம் பார்த்துக்கொண்டு இருக்க கூடாது ! - கத்தர் ஆட்சியாளர்!

தோஹா:ஃபலஸ்தீன் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை காண்பதற்கான திட்டத்தை கத்தர் ஆட்சியாளர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி அரபு உச்சிமாநாட்டில் முன்வைத்துள்ளார். அரபு லீக் உச்சிமாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் நடத்திய உரையில் அவர் இத்திட்டத்தை முன்மொழிந்தார்.

சஞ்சய்த் தத் போல சைபுன்னிஸாவுக்கும் மன்னிப்பு வழங்கவேண்டும் – கட்ஜு கோரிக்கை!

புதுடெல்லி: 1993-ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட சைபுன்னிஸா காஸி என்ற முதிய வயது பெண்மணிக்கும் மன்னிப்பு வழங்கவேண்டும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனுமான மார்க்கண்டேய கட்ஜு கோரிக்கை விடுத்துள்ளார்.

மறுவாழ்வு கோரி கஷ்மீர் திரும்பியவர்கள் போராட்டம்!

ஸ்ரீநகர்: அரசின் சரணடைதல் கொள்கையின் படி பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் கஷ்மீரில் இருந்து திரும்ப வந்த குடும்பங்கள், ஸ்ரீநகரில் போராட்டம் நடத்தினர். பஞ்சாப் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சரணடைந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது போல தங்களுக்கு உடனடியாக வழங்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மகாத்மா காந்தியை கொன்ற சதித்திட்டம் திரைப்படமாக உருவாகிறது!

மகாத்மா காந்தியை கொன்ற சதித்திட்டம் திரைப்படமாக உருவாகிறது. நாடு சுதந்திரமடைந்த சில மாதங்களில் 1948ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி காந்தியடிகள் கொல்லப்பட்டார். நாதுராம் கோட்சே என்ற தேச துரோகி காந்தியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.

தீவிரவாதி கைது நாடகம்: டெல்லி ஸ்பெஷல் பிரிவுக்கு மேலும் பின்னடைவு!

கஷ்மீர் அரசின் ‘சரண்ட அண்ட் ரிஹாபிலிஷேசன் பாலிசி’யின் படி அனுமதி கிடைத்து சரணடையவந்த முன்னாள் ஹிஸ்ப் கமாண்டர் லியாகத் அலி ஷாவை டெல்லியை தகர்க்க வந்த தீவிரவாதி என்று கைது செய்து போலி நாடகமாடிய டெல்லி ஸ்பெஷல் பிரிவின் பொய்களை உறூதிச்செய்யும் விதமாக இதுக்குறித்து எவ்வித தகவல்களையும் அளிக்கவில்லை என்று இண்டலிஜன்ஸ் பீரோ(ஐ.பி) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மக்களை ஏமாற்றும் களவாணிகள்!

மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. நாட்டை கொள்ளையடிப்பதில் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள்  இல்லைதான்.

பேட்டையில் கலவரத்தை உண்டாக்க நினைக்கும் ஹிந்து முன்னணிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம் !

நெல்லை மாவட்டம் பல வருடங்களுக்கு பிறகு  பேட்டை நவாப் வாலாஜா வக்ப் செய்யப்பட்ட சொத்துகளின் ஒரு பகுதி(100 கோடிக்கு மேல் உள்ள சொத்து மேலும் பல ஆயிரம் கோடி சொத்துகள் நிலுவையில் உள்ளது) முஸ்லிம்களின்  கையில் நீதிமன்றம் உத்தரவு படி கிடைத்துள்ளது. இதனால் வெறுப்புக்கு  உள்ளான ரவுடி கும்பல் ஹிந்து முன்னணியை ஏவி விட்டு

புதன், மார்ச் 27, 2013

சரணடைய வந்தவரை தீவிரவாதி என்று சொல்வதா?: ஒமர் அப்துல்லா கண்டனம் !

டெல்லியில் கைது செய்யப்பட்ட லியாகத் அலி ஷா, அங்குள்ள வணிக வளாகத்தினுள் தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் வந்ததாக டெல்லி போலீசார் கூறுகின்றனர். இந்தக் கூற்றை காஷ்மீர் போலீசார் மறுக்கின்றனர். 

குஜராத்தில் மதுவிலக்கு அமுலில் இருந்தாலும் வீடுகளில் நேரடி மது விநியோகம்: நத்தம் விசுவநாதன் தகவல்!

சென்னை: மதுவிலக்கு அமுலில் இருக்கும் குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் நேரடியாக வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யப்படுவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நத்தம். இரா.விஸ்வநாதன் இன்று தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சவுதி அரேபியாவில் தீ விபத்து: ஏழு இந்தியர்கள் உயிரிழந்தனர் !

ரியாத்: சவுதி அரேபியாவில் ஹைல் நகருக்கு அருகில்  ஆயன் என்ற இடத்தில் நாற்காலி தயாரிக்கும் நிறுவனத்தில்  இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 இந்தியர்கள் உயிரிழந்தனர். 

இலங்கையை போர்க் குற்றத்திற்காக விசாரணை செய்யவேண்டும் – கேம்பஸ் ஃப்ரண்ட் கோரிக்கை!

சென்னை:தமிழ் இன மக்களை இனப்படுகொலைச் செய்த குற்றத்திற்காக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர் குற்றத்திற்காக விசாரணை நடத்தவேண்டும் என்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

தலிபான் போராளிகள் தாக்குதலில் ஒரு பிரிட்டிஷ் வீரர் பலி: 9பேர் காயம் !

ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்டு பகுதியில், பணியில் இருந்த ரோந்துப் படையினரின் மீது, திங்கள் அன்று இரவு , தாலிபான் போராளிகள் தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டுகள் அடங்கிய லாரியுடனும், ஆயுதங்களுடனும் வந்த போராளிகள்  நடத்திய தாக்குதலில், ஒரு பிரிட்டிஷ் வீரர் பலியானதோடு 9 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்களில் ஆப்கானிஸ்தான் படையினரும் அடங்குவர்.. செவ்வாயன்று மீண்டும் ஜலாலாபாதின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தை, 8 பேர் அடங்கிய தற்கொலைப் படையினர் தாக்கியதில் 5 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தயராகும் வடகொரியா !

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த பீரங்கி படை, ராக்கெட்டுகளை தயார் நிலையில் வைக்க வடகொரியா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வடகொரியா சமீபகாலமாக உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி அணு ஆயுத ஏவுகணை சோதனை, ராக்கெட் ஏவுதல் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

செவ்வாய், மார்ச் 26, 2013

மியான்மரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் ஐ.நா தூதர்!

யங்கூன்:புத்த தீவிரவாதிகளின் முஸ்லிம்கள் மீதான தாக்குதலில் 32 பேர் பலியான மியான்மரின் மீக்திலா நகருக்கு ஐக்கிய நாடுகளின் தூதர் பார்வையிட சென்றுள்ளார்.

முஸ்லிம்கள் கைது செய்யப்பட்ட தீவிரவாத வழக்குகளில் விரைவில் தீர்வு காண சிறப்பு நீதிமன்றங்கள்!

புதுடெல்லி: முஸ்லிம் இளைஞர்கள் கைதுச்செய்யப்பட்டுள்ள தீவிரவாத வழக்குகளை விரைவில் முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கூறியுள்ளார். நிரபராதிகளை தீவிரவாத வழக்குகளில் சிக்கவைக்கும் புலனாய்வு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஷிண்டே உறுதியளித்துள்ளார்.

மதுரையில் பாப்புலர் ப்ரண்ட் சார்பாக ஜமாத் நிர்வாகிகளுக்கான சந்திப்பு நிகழ்ச்சி !

மதுரை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மார்ச் - 24 அன்று மதுரை மாவட்டத்தில் டவுன் ஹால் ரோடு பள்ளிவாசல் அருகில் உள்ள மதுரை மீனாட்சி மஹாலில் ஜமாத்தர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயலாளர் S. இல்யாஸ் அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் S.P. முஹம்மது நஸ்ருதீன் வரவேற்புரையாற்றினார்.

அறிவகம் தாவா குழுவின் “திருக்குரானும் நவீன விஞ்ஞானமும்”புத்தகம் வெளியீட்டு விழா !

தேனி மாவட்டம் அறிவகம் தாவா குழுவின் “திருக்குரானும் நவீன விஞ்ஞானமும்” புத்தகம் வெளியீட்டு விழா சனிக்கிழமை 16-03-2013 கம்பம் கோகுலம் யாதவர் மஹாலில் நடைபெற்றது.இதில்தேனி மாவட்டம்  பாப்புலர் ஃப்ரண்ட்  மாவட்ட தலைவர் M.சாந்து முஹம்மதுஅவர்கள் தலைமையில், கம்பம் பாப்புலர் ஃப்ரண்ட்  நகரத்தலைவர் K.சிக்கந்தர்

Skype, Whats App க்கு சவுதியில் தடை ?

ரியாத் : இணையத்தில் இலவசமாக பேசி கொள்ள உதவும் ஸ்கைப், செய்திகளை பரிமாற கொள்ள உதவும் வாட்ஸ் அப் போன்றவைகளுக்கு சவுதியில் தடை வரும் என தெரிகிறது.

உலகின் சக்தி வாய்ந்த அரபுகள் பட்டியலில் பல ஆச்சரியங்கள் !!

துபாய் : ஒரு முன்ணணி வணிக பத்திரிகையில் வெளியாகியுள்ள 2013ம் ஆண்டில் உலகின் சக்தி வாய்ந்த அரபுகள் பட்டியலில் பல ஆச்சரியங்கள் உள்ளன.

திங்கள், மார்ச் 25, 2013

காங்கிரசுடன் இனி கூட்டணி இல்லை: ஸ்டாலின் திட்டவட்டம் !

காங்கிரஸ் கட்சியுடன் இனி கூட்டணி வைக்கப் போவதில்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் நல்லூரில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், இலங்கைத் தமிழர் பிரச்னையில், மத்திய காங்கிரஸ் அரசு தமிழர்களை ஏமாற்றி விட்டதாகக் குற்றம்சாட்டினார்.

ஒபாமா-இஸ்ரேலின் தொழிலாளி! – ஹிஸ்புல்லாஹ்!

பெய்ரூத்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இஸ்ரேலின் தொழிலாளி என்று லெபனானின் ஹிஸ்புல்லாஹ் குற்றம் சாட்டியுள்ளது. நேற்று முன் தினம் இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒபாமா, அந்நாட்டின் அனைத்து நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததற்கு பதிலளித்துள்ளது ஹிஸ்புல்லாஹ்.

எஸ்.டி.பி.ஐ நடத்திய தூதரகம் நோக்கிய பேரணி! – இத்தாலி இணையதளத்தில்!

புதுடெல்லி:இந்திய மீனவர்களை சுட்டுக் கொலைச் செய்த இத்தாலி கடற்படையினரை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டுவர கோரி இத்தாலி தூதரகத்தை நோக்கி சோசியல்டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா நடத்திய பேரணியின் படம் அந்நாட்டின் செய்தி நிறுவனமான அன்ஸாவில் வெளியாகியுள்ளது. கடற்படையினரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்புவதாக கூறும் செய்தியுடன் எஸ்.டி.பி.ஐ நடத்திய பேரணியின் படமும் வெளியாகியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை மறைத்த சி.பி.ஐ!

புதுடெல்லி: சிவசேனா ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான கலவரத்தைத் தொடர்ந்து நடந்த மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்ற வாதத்தை பலப்படுத்த சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலில் இருந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளை வேண்டுமென்றே தவிர்த்துள்ளது.

டெல்லி போலீசின் ‘தீவிரவாதி கைது நாடகம்’ அம்பலமானது!

புதுடெல்லி: டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு நேற்று முன் தினம் நடத்திய ‘தீவிரவாதி கைது’ நாடகம் தோல்வியை தழுவியது. டெல்லி ஹோலி பண்டிகையொட்டியோ அல்லது அதற்கு பிறகோ மிகப்பெரிய குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டதாக ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் லியாக்கத் ஷாவை கைது செய்ததை ஊடகங்களுக்கு தெரிவித்த டெல்லி போலீஸின் போலி நாடகம் ஜம்மு கஷ்மீர் போலீஸ் மூலம் தோல்வியை தழுவியுள்ளது.

சனி, மார்ச் 23, 2013

! அவதூறு செய்திகளை வெளியிட்ட 2 ஆங்கில நாளேடுகளுக்கு "பாப்புலர் ஃபிரண்ட்" நோட்டீஸ்!

 பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை பற்றி அவதூறாக செய்தி வெளியிட்ட பிரபல ஆங்கில நாளேடான "டெக்கான் குரோனிக்கல்" உள்ளிட்ட 2 ஆங்கில நாளேடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  "டெக்கான் குரோனிக்கல்" பத்திரிகை, ஹைதராபாத், கொச்சின் மற்றும் பெங்களூரு பதிப்புகளிலும் "ஏசியன் ஏஜ்" என்ற இன்னொரு ஆங்கில நாளேட்டிலும் "பாப்புலர் ஃபிரண்ட்"ஐ சம்மந்தப்படுத்தி, செய்தி ஒன்று வெளியானது. அதில், அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட "கோக்ரஜார்" பாதுகாப்பு முகாம்களிலிருந்து 200 குழந்தைகளை கடத்தி வந்து, அவர்களை கர்நாடகாவிலும் கேரளாவிலுமுள்ள மதரசாக்களில் சேர்த்ததாக சொல்லப்பட்டிருந்தது.

ஈழம்! பாரதிய ஜனதாவின் இரட்டை முகமும் நீலி கண்ணீரும் !

இலங்கையில் நடந்த இனப்படுகொலை விடயமாக ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இந்தியா திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புத்துணர்ச்சி தரும் சக்தி பானங்களால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்: ஆராய்ச்சியில் தகவல் !

மக்களுக்கு உடனடி புத்துணர்ச்சியைத் தரும் சக்தி பானங்கள் பல விற்பனைசந்தையில் உள்ளன. ஆனால் இவை அதிக ரத்த அழுத்தத்தையும், மரணம் விளைவிக்ககூடிய மாரடைப்பையும் தர வல்லவை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

யூதக் குடியேற்றம் அமைதிக்கு தடை – பாரக் ஒபாமா!

ராமல்லா: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஃபலஸ்தீனுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். மேற்காசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஒபாமா நேற்று ஃபலஸ்தீன் மேற்கு கரைக்குச் சென்றார்.ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் ஒபாமா சந்திப்பை நடத்தினார். ராமல்லாவில் அதிபரின் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடந்தது.

மியான்மரில் மீண்டும் புத்தர்கள் வெறிச்செயல் 3 பள்ளிவாசல்கள் இடிப்பு !!

யங்கூன்: மத்திய மியான்மரில் மீக்திலா நகரத்தில் நேற்று முன் தினம் வெடித்த இனக்கலவரத்தில் ஒரு புத்த சன்னியாசி உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இப்பகுதியில் 3 முஸ்லிம் மஸ்ஜிதுகளை வன்முறையாளர்கள் தீக்கிரயாக்கியுள்ளனர். அங்கு தெருக்களில் சடலங்கள் கிடக்கக் காணப்பட்டதாக ஒரு உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தற்கொலையை கொலை வழக்காக்கும் காவல்துறை - சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கை காவல்துறை திசை திருப்புவதாகவும், இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மும்பைக் கலவரம்:சுதந்திரமாக சுற்றித்திரியும் சிவசேனா தீவிரவாதிகள்! – நீதியின் ஓரவஞ்சனை!

புதுடெல்லி:1992-ஆம் ஆண்டு டிசம்பரிலும் 1993 ஜனவரி மாதமும் மும்பை வீதிகளில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை உயிருடன் தீயில் பொசுக்கி, துப்பாக்கியால் சுட்டு, கத்தியால் குத்தி கொலைச்செய்த சிவசேனா தீவிரவாதிகள் இன்றும் மும்பையில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்.

வெள்ளி, மார்ச் 22, 2013

அல்ஜஸீரா புதிய 2 சானல்களை துவக்குகிறது!

தோஹா: பிரிட்டன் மற்றும் பிரான்சு நாடுகளில் அல்ஜஸீரா புதிய 2 தொலைக்காட்சி சானல்களை துவக்குகிறது. அல்ஜஸீரா யு.கே என்று பெயர் சூட்டப்பட்ட சானலுக்கு விரிவான நெட்வொர்க்கை உருவாக்குவதாக அல்ஜஸீராவின் சானல் இயக்குநர் ஷேக் அஹ்மத் பின் ஜாஸிம் அல் தானி தெரிவித்துள்ளார்.

ஈரானைத் தாக்கினால் இஸ்ரேலிய நகரங்களை தரைமட்டமாக்குவோம் ! - ஆயதுல்லாஹ் கொமேனி !

அணு ஆராய்ச்சி நடவடிக்கைகளை கைவிடாவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் கூறிவருகிறது. இந்நிலையில் ஈரான் மார்க்க தலைவர் ஆயதுல்லாஹ் கொமேனி  துபாயில் செய்தியாளர்களை சந்தித்தார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி - இந்தியா ஆதரவு!

ஜெனிவா : இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா  கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 25 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளன. 13 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தும் வாக்களித்துள்ள நிலையில் 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தது.

இதயம் கவர்ந்து முர்ஸி நாடு திரும்பினார்!

புதுடெல்லி: ஜமால் அப்துல் நாஸரின் நினைவுகளை மறக்காத இந்திய தலைவர்களின் உள்ளங்களை 3 தின சுற்றுப்பயணத்தின் போது கவர்ந்த எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி நாடு திரும்பினார். ஃபலஸ்தீன் பிரச்சனைக்கு தீர்வு காண எகிப்து மத்தியஸ்தம் வகிப்பதற்கு அங்கீகாரம் அளித்த இந்தியா, எகிப்தின் முதல் ஜனநாயக அதிபர் என்ற அடைமொழியிட்டு பாராட்டி முர்ஸியை வழியனுப்பி வைத்தது.

வியாழன், மார்ச் 21, 2013

இலங்கை அரசை கண்டித்து எஸ்டிபிஜ கட்சி ஆர்ப்பாட்டம்!

இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும், சர்வதேச போர்குற்றவாளி என்று ராஜபக்சேயை அறிவிக்க வேண்டும், இலங்கை தமிழர்கள் வாழும் பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், என்று வலியுறுத்தியும்,இலங்கையில் ஏற்பட்ட மனித உரிமை மீறலை கண்டித்தும்,

நாளைய பட்ஜெட்டிற்கான SDPI கட்சியின் கோரிக்கைகள் !



2013-2014 க்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கும் சூழ்நிலையில் கடந்த வாரம் SDPI ன் நிர்வாகிகள் தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முஹம்மது ஜான் அவர்களை சந்தித்து SDPI ன் கோரிக்கைகளை அளித்தனர் .