வியாழன், மார்ச் 21, 2013

பெண் செய்தி வாசிப்பாளரிடம் வம்பு - சன் நியூஸ் எடிட்டர் கைது !


சென்னை : பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் செய்தி வாசிப்பாளர் சென்னை காவல்துறை ஆணையரிடம் கொடுத்த புகாரின் பேரில், சன் செய்தி தொலைக் காட்சியின் ஆசிரியர் ராஜாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

ராஜா தரும் தொல்லைகளை வெளியே சொல்ல முயன்றால் தமது வேலை போய்  விடும் என்று மிரட்டியதாகவும் , அவருக்கு இணங்க மறுத்ததால் அதிக வேலை வாங்கியதாகவும் பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த புகாரில் கூறப் பட்டுள்ளது. இரவிலும், அலுவல் நேரத்துக்குப் பிறகும் அவரிடம் பேசுவதற்கு தொல்லை அளித்து வந்ததாகவும்,  தமக்கு சம்பளச் சலுகைகள் அளித்து இணங்கச் செய்ய  ராஜாவின் உதவியாளரும் செய்தி வாசிப்பாளருமான வெற்றி வேந்தன் முயற்சி செய்ததாகவும் அவர் தம் புகாரில் தெரிவித்துள்ளார்.

வெற்றி வேந்தன் பேசிய ஒலி நாடாக்களையும் தம் புகாருடன் இணைத்து பெண் செய்தி வாசிப்பாளர் அளித்துள்ளார்.

1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக