திங்கள், மார்ச் 25, 2013

காங்கிரசுடன் இனி கூட்டணி இல்லை: ஸ்டாலின் திட்டவட்டம் !

காங்கிரஸ் கட்சியுடன் இனி கூட்டணி வைக்கப் போவதில்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் நல்லூரில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், இலங்கைத் தமிழர் பிரச்னையில், மத்திய காங்கிரஸ் அரசு தமிழர்களை ஏமாற்றி விட்டதாகக் குற்றம்சாட்டினார்.

இலங்கைத் தமிழர் நலனுக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என காத்திருந்திருந்ததாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார். தேர்தலுக்காக கூட்டணியில் இருந்து விலகவில்லை என கூறிய அவர், இலங்கைத் தமிழர்களுக்காக போராடியதால் இரண்டு முறை திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக தெரிவித்தார். 
இன்று திமுக செயற்குழு கூட்டம்: இதற்கிடையில், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைமைச் செயற்குழுவின் அவசரக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய அரசில் இருந்து வெளியேறியது பற்றியும், அடுத்தக்கட்ட போராட்டம் பற்றியும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக