செவ்வாய், மார்ச் 26, 2013

மதுரையில் பாப்புலர் ப்ரண்ட் சார்பாக ஜமாத் நிர்வாகிகளுக்கான சந்திப்பு நிகழ்ச்சி !

மதுரை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மார்ச் - 24 அன்று மதுரை மாவட்டத்தில் டவுன் ஹால் ரோடு பள்ளிவாசல் அருகில் உள்ள மதுரை மீனாட்சி மஹாலில் ஜமாத்தர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயலாளர் S. இல்யாஸ் அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் S.P. முஹம்மது நஸ்ருதீன் வரவேற்புரையாற்றினார்.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர். M. ஷாஜஹான் அவர்கள் சட்ட விழிப்புணர்வு சம்பந்தமான கருத்துகளை வழங்கினார். ஜமாத்துகளின் முக்கியத்துவம் மற்றும் ஜமாத்துகள் மக்களுக்கு ஆற்றவேண்டிய சேவைகள் குறித்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநிலத்தலைவர் A.S. இஸ்மாயில் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இறுதியாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் M.A. இத்ரிஸ் அவர்கள் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் உள்பட 100 - க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
1
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயலாளர் S. இல்யாஸ் உரையாற்றியபோது


பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மதுரை மாவட்ட தலைவர் S.P. முஹம்மது நஸ்ருதீன் உரையாற்றியபோது


பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர். M. ஷாஜஹான் உரையாற்றியபோது


பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநிலத்தலைவர் A.S. இஸ்மாயில் உரையாற்றியபோது


பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் M.A. இத்ரிஸ் பேசிய போது


கூட்டத்தின் ஒரு பகுதி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக