வெள்ளி, மார்ச் 22, 2013

ஈரானைத் தாக்கினால் இஸ்ரேலிய நகரங்களை தரைமட்டமாக்குவோம் ! - ஆயதுல்லாஹ் கொமேனி !

அணு ஆராய்ச்சி நடவடிக்கைகளை கைவிடாவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் கூறிவருகிறது. இந்நிலையில் ஈரான் மார்க்க தலைவர் ஆயதுல்லாஹ் கொமேனி  துபாயில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஈரானின் அணு ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவ் மற்றும் ஹைபா நகரங்களை தரைமட்டமாக்குவோம்.

கடந்த சில வருடங்களாகவே ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் கொண்டு வந்து பல்வேறு தடைகளை ஏற்படுத்தியுள்ளன. துடிப்பு மிக்க ஈரானை எந்த ஒரு நாடும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாது. 

ஈரான் குடிமக்களின் பயன்பாட்டிற்காகவே அணு ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.
1



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக