செவ்வாய், மார்ச் 27, 2012

ஆப்கானில் 2 பிரிட்டீஷ் ராணுத்தினர் பலி!


காபூல்:தெற்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ ராணுவ தளத்தில் ஆப்கான் ராணுவ வீரனின் வேடத்தில் வந்த நபர் இரண்டு பிரிட்டீஷ் ராணுவ வீரர்களை கொலைச் செய்தார். நேட்டோ ராணுவம் அவரை கொலைச் செய்தது. நேற்று காலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹெல்மந்த் மாகாணத்தில் நேட்டோ ராணுவ தலைமையகத்தில் ஆயுதம் ஏந்தி வந்த நபரை நேட்டோ சுட்டுக்கொன்றது என்று நேட்டோ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெய்ஸன் வாகனர் கூறினார்.
காந்தஹாரில் நேற்று முன்தினம் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு நேட்டோ ராணுவ வீரனும், எட்டு ஆப்கான் போலீசாரும் கொலைச் செய்யப்பட்டதற்கு பிறகு நடக்கும் புதிய சம்பவம் இதுவாகும். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ வீரன் 16 அப்பாவிகளை படுகொலைச் செய்த பிறகு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினருக்கு எதிராக அங்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக