செவ்வாய், மார்ச் 27, 2012

மஹாராஷ்டிரா:நக்சல் தாக்குதலில் 16 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பலி


  மும்பை/கட்சிரோலி :மஹாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சல்கள் இன்று நிகழ்த்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ்(சி.ஆர்.பி.எப்) படையைச் சேர்ந்த 16 வீரர்கள் உயிரிழந்தனர்.
நக்சல் ஆதிக்கம் நிறைந்த சட்டீஸ்கர் மாநில எல்லைப் பகுதி அருகே உள்ள கட்சிரோலி மாவட்டத்தில், சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பயணம் செய்த பேருந்தை வெடிக்கச் செய்து, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்துக்க்குள் புகுந்த நக்சல்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வழக்கமாகச் செல்லும் பாதையில் நிலக்கண்ணி வெடியை புதைத்து வைத்தனர். இந்நிலையில், அப்பகுதியில் இன்று மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, நில கண்ணிவெடியை இயக்க வைத்து பேருந்தை தகர்த்தனர். இதில் 16 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், மாநில போலீசாரும், மத்திய ரிசர்வ் படையினரும் அங்கு விரைந்து சென்று, காயமடைந்த வீரர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நக்ஸல்களை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக