‘ஈரானின் தடை குறித்து நாங்கள் விவாதித்தோம். ப்ரிக்ஸில் அனைத்து நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் ஆகும். ஈரானுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தை நாங்கள் மதிக்கிறோம்’ என்று இந்தியாவின் வர்த்தகதுறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறினார். கூட்டத்திற்கு பிறகு கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அனைத்து ப்ரிக்ஸ் நாடுகளும் ஈரானுடன் வர்த்தகத்தை தொடருவோம் என்று அறிவித்துள்ளன.
ஏதேனும் உள்நாட்டு சட்டத்தையோ, நாடுகளின் சட்டத்தையோ பின் தொடர்வது எனது நாட்டின் கடமை அல்ல என்று சீனாவின் வர்த்தக அமைச்சர் பெண்டீமிங் கூறினார்.
அதனிடையே கடனில் சிக்கித் தவிக்கும் ஐரோப்பிய நாடுகளை காப்பாற்ற கூட்டு முயற்சி தேவை என்று ப்ரிக்ஸ் நாடுகள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக