வெள்ளி, டிசம்பர் 16, 2011

கேரளாவை விட்டு வெளியேற தமிழர்களுக்கு 24 மணிநேர கெடு


 கடந்த சில நாட்களாக முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக கொந்தளித்து கொண்டிருக்கும் தமிழக கேரள எல்லைகளில் கேரள பகுதிகளில் வசிக்கும் தமிழ்  மக்கள் மீது அங்குள்ள மலையாளிகள் கொலைவெறி தாக்குதல் தொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து கேரளாவில் தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான சேத்துகுழி, சாஸ்தான் ஓடை, மங்கலம், உடும்பன்சோலையை   விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்
என்று தமிழர்களுக்கு கெடுவும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து தமிழர்கள் மலை பாதை வழியாக  வந்த வண்ணம் உள்ளனர்
இந்த தகவலை கேள்விப்பட்டதும் அதற்கு பதிலடியாக, மதுரை தல்லாகுளத்தில் உள்ள கேரள நிதி நிறுவனங்கள் மீது இன்று சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்குதல் நடத்தினர்.   இதுபோல் புதுவையிலும் கேரள வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தபட்டது.

இதனை தொடர்ந்து மதுரையில் செயல்பட்டு வரும் கேரள வணிக மற்றும் நிதி நிறுவனங்கள் அடுத்த 24 மணிநேரத்திற்குள் தங்கள் நிறுவன்ங்களை  மூட  வேண்டும் இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் இதனால் மதுரையில் கடும் பதற்றம் நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக