சனி, ஜனவரி 19, 2013

இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதில் பாகிதானுக்கு எந்த வித தொடர்பும் இல்லை !!

இஸ்லாமபாத்: இந்திய வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதில் பாகிதானுக்கு எந்த வித தொடர்பும் இல்லை என்று இந்தியாவிற்கான அந்நாட்டு தூதர் சல்மான் பஷீர் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம் இந்தியாவில் அரசியலாக்கப்படுவதாகவும் பஷீர் கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானியுடன் பேச்சு நடத்த இந்தியா முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், இந்திய நிலைகளை தாக்க வேண்டாம் என்று பாகிஸ்தான் அரசு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும், எதிர்பாராதவிதமாக இந்த பிரச்சனை பொதுப் பிரச்சனையாக மாறிவிட்டது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையே சுமூக உறவு ஏற்பட, பாகிஸ்தான் எல்லை விதிகளை மதித்து நடப்பதாகவும், இந்த பிரச்சனையில் பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டுவது முறையல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக