வெள்ளி, ஜனவரி 11, 2013

சென்னையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில அலுவலக திறப்பு விழா !!

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தமிழ் மாநில அலுவலகம் சென்னை மண்ணடியில் சுல்தான் தெருவில் திறக்கப்பட்டது .இந்நிகழ்ச்சிக்கு ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர் மௌலவி.D.செய்யது இபுராஹீம் உஸ்மானி அவர்கள் தலைமை தாங்கினார் . மாநில பொதுச்செயலாளர் மௌலவி.A.ஆபிருதீன் மன்பஈ அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் மௌலானா மௌலவி.A.உஸ்மான் பெய்க் ரஷாதி அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சென்னை மாவட்ட பொறுப்பாளர் மௌலானா மௌலவி.A.M.M.சாலிஹ் சேட் பாகவி M.A., அவர்கள் நன்றியுரையாற்றினார் . இதில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாவட்ட , மாநில மற்றும் தேசிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக