வெள்ளி, ஜனவரி 11, 2013

ஆணையர் ஜார்ஜ் ஒன்றும் சென்னை ஜார்ஜ் கோட்டையின் மன்னர் அல்ல! - உயர்நீதிமன்ற நீதிபதி !!

”சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ். ஒன்றும் ஜார்ஜ் கோட்டையின் மன்னரல்ல. அவர் பொது அதிகாரி போல நடந்து கொள்ளவேண்டும். அத்துடன் நாளை கோர்ட்டில் நேரில் ஆஜராகவேண்டும்: ”என்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆறுமுகசாமி காட்டமாக தெரிவித்துள்ளார்.சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜூக்கு, உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பொதுமக்களை சந்தித்து குறை கேட்கும் முறையை மாற்றியவர் ஜார்ஜ் என்றும் ‘ஆணையர் ஜார்ஜ் ஒன்றும் சென்னை ஜார்ஜ் கோட்டையின் மன்னர் அல்ல’ என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி கடுமையாக சாடியுள்ள்ளார். மேலும் அரசு மற்றும் காவல்துறைக்கு கரும்புள்ளி ஏற்படும் வகையில், ஜார்ஜ் செயல்பட்டு வருவதாகவும் உயர்நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீதர் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மேற்கண்டவாறு சென்னை காவல் ஆணையர் ஜார்ஜை கடுமையாக சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக