.jpg)
மாலியில் போராளிகள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பிரான்சு ராணுவம் கடுமையான தாக்குதல்களை கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடத்தி வருகிறது. ஆனால், துவக்கத்தில் பின்வாங்கிய போராளிகள் கடந்த 2 தினங்களாக வலுவான பதிலடிகளை கொடுத்த வருகின்றனர். அதே வேளையில், கூடுதல் ராணுவ வீரர்களை மாலிக்கு அனுப்ப போவதாக பிரான்சு அதிபர் பிரான்சுவா ஓலண்ட் அறிவித்துள்ளார்.
தற்பொழுது 750 பிரான்சு ராணுவ வீரர்கள் மாலியில் உள்ளனர். போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் பிரான்சு ராணுவம் தாக்குதலை பலப்படுத்தும் என்று அவர் கூறினார்.
மாலியில் பிரான்சு தலையிட கடந்த வாரம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் திங்கள் கிழமை அனுமதி அளித்தது. 900 ராணுவ வீரர்களை அனுப்பப்போவதாக நைஜீரியா அறிவித்துள்ளது. முன்னர் 300 ராணுவ வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என்று நைஜீரியா அறிவித்திருந்தது. 2500 பிரான்சு ராணுவ வீரர்கள் உடனடியாக மாலிக்கு செல்வார்கள் என்று கருதப்படுகிறது. ஐவரிகோஸ்டில் இருந்து 30 பிரான்சு நாட்டு ராணுவ டாங்குகள் நேற்று மாலிக்கு சென்றது. தாக்குதல் தீவிரமடைந்துள்ள பகுதிகளில் இருந்து 3 ஆயிரம் பேர் வெளியேறியதாக ஐ.நா கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக