செவ்வாய், ஜனவரி 22, 2013

இந்தியா பயங்கரவாதத்தை தூண்டுகிறது : ஹாபிஸ் சையத் குற்றச்சாட்டு !

இந்தியாவை, அதன் சொந்த மண்ணில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக, உலக நாடுகள் பிரகடனப்படுத்த வேண்டும், என லஷ்கர்-இ-தொய்பாவின் தலைவர் ஹபீஸ் சயீத் கூறியுள்ளார். முன்னதாக, பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் முகாம்களில் தீவிரவாத பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன, என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியிருந்தார் இந்தியாவில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா ஆகியவை இந்துத்துவா தீவிரவாத்தை உருவாக்குகின்றன ஜவுதா எக்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, மெக்கா மசூதி குண்டுவெடிப்பு மற்றும் மாலேகான் குண்டுவெடிப்புக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் காரணம் என உறுதியாக தெரிந்த பின்பும், நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு மவுனம் சாதித்து வருகிறது இதனால், சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் சேதம் உண்டாக்கப்படுகிறது.இது தொடர்பாக, தனது "ட்விட்டரில்" கருத்துத் தெரிவித்துள்ள ஹபீஸ் சையத் இந்திய உள்துறை அமைச்சர், இந்து தீவிரவாதம் குறித்து அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தை உலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக உலக நாடுகள் பிரகடனப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்
2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக