மெக்சிகோவில் நாய்கள் சுற்றி வளைத்து கடித்ததில் குழந்தை, தாய் உள்பட 4 பேர் பரிதாபமாக பலியாயினர். மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவின் லா ஈஸ்டிரல்லா மலைப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வனப்பகுதி உள்ளது. இங்கு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் புதர் நடுவே கடந்த வாரம் ஒரு பெண் மற்றும் அவரது குழந்தையின் உடல்கள் மீட்கப்பட்டன, இவர்களது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. இந்நிலையில், அதே காட்டின் வேறொரு பகுதியில் கடந்த 5ம் திகதி இளைஞர் ஒருவர் மற்றும் இளம்பெண்ணின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களது உடலிலும் காயங்கள் இருந்தன.
பணம் மற்றும் பொருட்களுக்காக இவர்களை கொள்ளையர்கள் தாக்கி இருக்கலாம் என கருதப்பட்டது, ஆனாலி விசாரணையில் கொள்ளை அடிக்கவில்லை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய பொலிசார், குகை மற்றும் பாறைகளின் நடுவே வாழும் நாய்கள் தான் கடித்து கொன்றது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து தீவிர வேட்டையில் 8 குட்டிகள் உட்பட 25 நாய்கள் பிடிக்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக