ஞாயிறு, டிசம்பர் 18, 2011

தடுத்தே தீருவோம் உதயகுமார் ஆவேசம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperநெல்லை : எப்பாடு பட்டாவது கூடங்குளம் அணுமின் நிலையத்தை தடுத்தே தீருவோம் என்று அணு உலைக்கு எதிரான போராட்ட குழு  தலைவர் உதயகுமார் ஆவேசத்துடன் கூறினார்.ரஷ்யாவுக்கு 3 நாள் அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மன்மோகன் சிங்,
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்னும் ஓரிரு வாரங்களில் மின் உற்பத்தி தொடங்கும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து போராட்ட குழுத் தலைவர் உதயகுமார் கூறியதாவது: பிரதமரின் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்தோம். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை என்பதை அவரது பேட்டி உணர்த்துகிறது. இதை கண்டித்து 72 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. எப்பாடு பட்டாவது கூடங்குளம் அணுமின்நிலையத்தை தடுத்து நிறுத்துவோம். இதற்காக உயிரிழக்க கூட தயங்க மாட்டோம். இவ்வாறு உதயகுமார் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக