வியாழன், டிசம்பர் 15, 2011

தமிழகத்திலிருந்து இந்திய கப்பற்படையில் பணிபுரிய, 2012 ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக, ஐ.என்.எஸ். தகவல் வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் டிப்ளமோ வரை படித்தவர்கள், இந்தியக் கப்பற்படைக்கு சேர விண்ணப்பிக்கலாம் என்று அடையாறில் உள்ள ஐ.என்.எஸ். தலைமையகம் அறிவித்துள்ளது. இதில், மாலுமி பணிக்கு 12-ஆம் வகுப்பு கணிதம், இயற்பியலை பாடமாகக் கொண்டவர்கள் அல்லது டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம்
தேதியில் இருந்து, 1995 ஜூலை 31 ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும் 2012 ஜனவரி ஆறாம் தேதிக்குள் மாலுமி பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று ஐ.என்.எஸ். தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்கள், கடற்படையில் சமையல் மற்றும் உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்தப் பணிக்கு, நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, உடல் தகுதி, மருத்துவத் தகுதி மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக