சனி, பிப்ரவரி 23, 2013

முஹம்மது நபி, அம்பேத்கார், காந்தி ஆகியோரின் மதுவுக்கு எதிரான கருத்துக்களை பொதுமக்களிடம் சேர்க்கிற டெலிவரிபாய் நான் - வைகோ !!


மதுவிலக்குக் கருத்துக்களைப் பரப்புவதில் முஹம்மது நபி, அம்பேத்கர், காந்தி ஆகியோரின் செய்திகளை விநியோகிக்கும் சிறுவனாகவே தான் இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். கடந்த 18ம் தேதி முதல் மதுவிலக்கை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள வைகோ  நேற்று காலை வில்லியம்பாக்கத்தைச் சென்றடைந்தார்.


இன்று காஞ்சிபுரம் நோக்கி நடைப்பயணம் தொடர்கிற வைகோ, முன்னிரவில் திருக்கழுகுன்றத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுகையில் " மது என்னும் அரக்கனை ஒழிக்க அனைவரும் பாடுபடவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

''முஹம்மது நபி, அம்பேத்கார், காந்தி ஆகியோரின் மதுவுக்கு எதிரான கருத்துக்களை பொதுமக்களிடம் சென்று சேர்க்கிற டெலிவரிபாய் வேலையைத் தான்  இந்த நடைப்பயணத்தில் செய்துவருகிறேன்" என்று வைகோ தெரிவித்தார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக