செவ்வாய், பிப்ரவரி 26, 2013

ரூ.500 கோடி... ஓட்டு வங்கியை குறிவைத்து மடங்களுக்கு வாரி வழங்கும் பாஜக !

கர்நாடகாவில் இந்துக்களின் ஓட்டுக்களை கவருவதற்காகவும், ஜாதி ஓட்டுக்களை குறிவைத்தும் ஆளும் பாஜக                                                                                                                                                                    முதல்வர்கள் அங்குள்ள மடங்களுக்கு கோடி கோடியாக கொட்டிக் கொடுத்துள்ள சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் வரிப்பணத்தை மடாதிபதிகளுக்கும் சாமியார்களுக்கு வாரி இறைத்த பாஜக முதல்வருக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகளை கிளப்பியுள்ளனர் எதிர்கட்சியினர்                                                                                                                                                                            இந்த விமர்சனம்தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் வாக்குகளை கவர பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களுக்கு செலவழிப்பதை விடுத்து ரூ.500 கோடி வரை வாரி இறைத்துள்ளனர் கர்நாடகாவை ஆளும் கட்சியான பாஜக முதல்வர்கள்.பாஜக தோல்வியின் பயத்தினால் மக்கள் பணத்தை  இந்துக்களின் ஓட்டுக்களை கவருவதற்காகவும் வாரி வாரி வழங்குகிறது என்பது குறிப்பிடதக்கது.
3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக