திங்கள், பிப்ரவரி 25, 2013

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அரசியல் எழுச்சி மாநாடு!




எஸ்.டி.பி.ஐ (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா) கட்சியின் இராமநாதபுரம் மாவட்டத்தின் சார்பாக அரசியல் எழுச்சி மாநாடு நேற்று (23.02.2013)இராமநாதபுரம் சந்தைத்திடலில் நடைபெற்றது.

மாலை 5.30 மணி அளவில் மாநாட்டு பேரணியும்,அதனை தொடர்ந்து மாலை 6.30 மனி அளவில் மாநாட்டு பொதுக்கூட்டமும் நடைபெற்றது. மாநாட்டு பொதுக்கூட்டத்திற்கு இராமநாதபுரம் மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் முஹம்மது இஸ்ஹாக் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர்கள் அப்துல் வஹ்ஹாப், அம்ஜத் ஹுசைன்,மாவட்ட செயலாளர்கள் முஹம்மது ஷரீப் சேட்,செய்யது இப்றாஹிம்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், ஜஹீருதீன், செய்யது ஹாலிது, அப்துல் காதர், முஹம்மது ரோஸ்லான், ரியாஸ் முஹம்மது, அப்துல்லாஹ் சேட், முஹம்மது சலீம், நவாஸ்கான், அப்துல் ஜமீல், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் ஹபீப் நவாஸ் கான், ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைவர் ஜெய பாண்டியன், எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க மாவட்ட அமைப்பாளர் கார்மேகம், பரமக்குடி தொகுதி தலைவர் செய்யது இப்ராஹிம், திருவாடானை தொகுதி தலைவர் மவ்லவி முஹம்மது இப்ராஹிம் கனி, முதுகுளத்தூர் தொகுதி தலைவர் அஹமது ஹுசைன் சித்தீக் கான், இராமநாதபுரம் தொகுதி தலைவர் பைரோஸ்கான், துணைத்தலைவர் மவ்லவி அப்பாஸ் அலி, இராமநாதபுரம் நகர் தலைவர் முஹம்மது சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்மாநாட்டில் திமுக மாவட்ட செயலாளர் சுப.தங்கவேலன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் முருகபூபதி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் திரவியம், மதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் சுப்பிரமணியன், அகில இந்திய அகமுடையார் உறவினர் சபை நிறுவனர் ரஜனிகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருப்பாளர் முஹம்மது யாசின், தமிழ் புலிகள் இயக்கம் மாவட்ட செயலாளர் சிவக்குமார், தமிழர் தேசிய இயக்கம் மாவட்ட செயலாலர் பசுமலை , மருதம் மக்கள் இயக்கம் மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, அகில இந்திய மீனவர் சங்கத்தலைவர் அண்டன் கோமஸ் ,மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரெத்தினம் அண்ணாச்சி, ஃபாத்திமா கனி, செல்வராஜ் நாடார் மஹாஜன சங்கம் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் ,பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் காலித் முஹம்மது ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

சிறப்புரையாற்றிய பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் காலித் முஹம்மது தமது உரையில், இவ்வுலகில் இரண்டு விதமான வர்க்கங்கள் உண்டு.ஒன்று ஆளும் வர்க்கம்,மற்றொன்று அடிமை வர்க்கம்,இந்த இரண்டு வர்க்கங்களுக்கிடையே நடைபெறும் யுத்தமே உலக வரலாறு.இன்றைய இந்தியாவில் அரசியல் என்பது வியாபாரமாகிவிட்ட சூழலில் , இந்நிலையை மாற்றி அமைக்க எஸ்.டி.பி.ஐ உதயமாகியுள்ளது. கட்சி துவக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகலாம்.ஆனால் இதன் நிர்வாகிகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக பணிகளில்,மக்கள் பிரச்சனைக்காக களம் இறங்கியவர்கள். எனவே எஸ்.டி.பி.ஐ கட்சி பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் பக்க பலமாக இருக்கும் என்றார்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ரெத்தினம் அண்ணாச்சி தமது உரையில் :

எஸ்.டி.பி.ஐ கட்சி என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. அனைவருக்கும் உரிய அரசியல் கட்சி. இக்கட்சியில் மது குடிப்பவர்கள் நிர்வாகிகளாக வரமுடியாது. எனவே மதுவை புறக்கணித்து விட்டு அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களும் கட்சியில் இணைய வேண்டும்.அதை விடுத்து முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்று கூறுவதில் அர்த்தமில்லை என்றார்.

அகில இந்திய மீனவர் சங்கத்தலைவர் அண்டன் கோமஸ் தமது உரையில்:

நாங்கள் ஒரு அரசியல் கட்சி எவ்வாறு இருக்க வேண்டும் என திர்பார்த்தோமோ, அதனை இப்போது எஸ்.டி.பி.ஐ வடிவில் காண்கிறோம். எந்த அரசியல் கட்சி கூட்டம் நடத்தினாலும் அங்கு மது வாடை இருக்கும் ஆனால் மதுவின் வாடை இல்லாத இளைஞர் பட்டாளத்தை எஸ்.டி.பி.ஐ உருவாக்கியிள்ளது.இப்படிப்பட்ட மாநாட்டிற்கு அனுமதி தர மறுத்த காவல்துறையை எச்சரிக்கிறேன். உங்களிடம் அனுமதி கேட்பது கூட்டம் நடத்துவதற்கு அல்ல. நாங்கள் கூட்டம் நடத்தும் போது வேறு யாரும் அந்த தினத்தில் கூட்டம் நடத்தி இடையூறு ஏற்படக்கூடாது எனதற்காக தெரிவிப்பதற்காகத்தான்.இந்த நாட்டில் மக்களுக்கு தான் அதிகாரமே தவிர,மக்களின் சேவயாளன் என்று சொல்லும் அரசு அதிகாரிகளுக்கல்ல என்றார்.

மாநில செயற்குழு உறுப்பினர் ஃபாத்திமா கனி தமது உரையில் :

எஸ்.டி.பி.ஐ கட்சி மதுவிலக்கை அமல் படுத்த தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.பெண்களின் நலனில் அக்கரையுடன் செயல்படும் ஒரே கட்சி எஸ்.டி.பி.ஐ மட்டுமே அதற்கு இங்கு கூடியிறுக்கும் ஆயிரக்கணக்கான பெண்களின் கூட்டமே சாட்சி. தமிழகத்தில் அரசே மதுபானக்கடைகளை இழுத்து மூடும் அளவிற்கு எங்களது போராட்டங்களை தீவிரப்படுத்துவோம். அரசு இதனை செய்ய தவறினால் தமிழக மக்கள் மதுக்கடைகளை பூட்டி மதுவினை தமிழகத்தின் வீதிகளில் மதுவினை ஓட வைப்பார்கள். இந்த போராட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியால் எழுச்சியடையும் என்றார்.

மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தமது உரையில்,

மாநாடு நடத்த பலநாட்களுக்கு முன்பே அனுமதி கேட்டும்,பலமுறை தொடர்பு கொண்டும் இறுதியில் வழக்கம் போலவே இழுத்தடிப்பு தொடர்கிறது. சதி வேலை நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்று கூறி அரண்மனை பகுதியில் அனுமதி தர மறுப்பதாக காவல் துறை ஆய்வாளர் கணேசன் கூறியுள்ளார். தகவல் சொன்னது யார்? என்று ஆய்வாளர் கணேசன் விளக்க வேண்டும்.இந்நாட்டில் மீனவன் அடித்து கொல்லப்படுகிறான்,மதுவின் போதையினால் கொலைகளும், கொள்ளைகளும், கற்பழிப்புகளும் தொடர்கின்றன.பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை தொடர்கிறது. இதனை பற்றியெல்லாம் தகவல் கொடுக்காதவர்கள் சதிவேலை நடப்பதாக தகவல் கொடுக்கிறார்களாம். எஸ்.டி.பி.ஐ வளர்ச்சியை தடுக்க இது போன்ற அரசியல் சதி நடப்பதாக நாங்கள் கூறுகிறோம். ஆனால் உறுதிமிக்க எஸ்.டி.பி.ஐ தொண்டர்களிடம் இது போன்ற காவல்துறையினரின் சதி வேலைகள் எடுபடாது. எஸ்.டி.பி.ஐ கட்சி அனைத்து சதிகளையும் தகர்த்தெரியும் என்றார்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தமது உரையில்,

இராமநாதபுரம் மாவட்டம் என்பது எஸ்.டி.பி.ஐ கட்சியின் வரலாற்றில் மிகவும் முக்கியமான பகுதி. கட்சியின் துவக்க காலம் முதல் வீர்யத்தோடு செயல்பட்டு வரும் மாவட்டம்.கட்சியின் வரலாற்றில் இராமநாதபுரம் மாவட்டம் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. எஸ்.டி.பி.ஐ தமிழக சட்டமன்ற தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்ட இடங்களில் இராமநாதபுரமும் ஒன்று.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டபோது இராமநாதபுரம் மாவட்டத்தில் தான் அதிக கவுன்சிலர்களை பெற்றோம். இந்த மாநாட்டிற்கு பிறகு இந்த மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ இன்னும் அதிவேகமாக வலுப்பெறும்.

இந்த மாவட்டத்தில் மிக முக்கியமான பிரச்சினையாக மீனவர்கள் பிரச்சினை உள்ளது.எதிரி நாடாக ஊடகங்களாலும்,அரசியல் வாதிகளாலும் கருதப்படுகின்ற பாகிஸ்தான் கூட இந்திய மீனவர்களுக்கு செய்யாத கொடுமைகளை, இந்தியாவின் நட்பு நாடான இலங்கை செய்து கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர்களையும்,இந்திய மீனவர்களையும் அழித்தொழிக்கும் இலங்கை அரசினை எதிர்க்க துணிவில்லாத அரசுகளும், ஆட்சியாளர்களும் இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்கள். ஐநா மன்றத்திலே அமெரிக்கா கொண்டுவரும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒரு கண்துடைப்பு நாடகம்.ராஜபக்ஷே ஒரு போர்க்குற்றவாளி என்பதற்கு சமீபத்தில் வெளியான வீடியோ சாட்சி.அதில் பிரபாகரனின் மகனான 12 வயதான பாலகனை கொடூரமாக 3 அடி தூரத்தில் நிறுத்தி சுட்டுக்கொன்றது இலங்கை ராணுவம்.இப்படிப்பட்ட கொடூரமான நிகழ்வுகளை நடத்திய ராஜபக்ஷேவை செர்பிய அதிபர் மிலோசெவிக் போன்று சர்வதேச நீதிமன்றத்தில் விசாரனை நடத்த வேண்டும். மேலும் இலங்கையில் உள்ள தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

இன்றைய அரசியல் கட்சிகள் தூய்மையானதாக இருந்திருந்தால் எஸ்.டி.பி.ஐ உருவாக்கப்பட்டிருக்காது.இந்த நாட்டில் உள்ள பிரச்சினைகள் ஏராளம்.ஒவ்வொறு பிரச்சினைகளுக்கும் பின்னால் ஒவ்வொரு அரசியல் உள்ளது. மீனவர்கள், முஸ்லிம்கள், தலித்துக்கள், பழன்குடியின மக்கள் போண்றோரின் பிரச்சினைகளும் லஞ்சம், ஊழல், தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற பிரச்சினைகளும் தேசிய பிரச்சினைகள். இவற்றிற்காக தமிழகத்தில் மட்டும் போராடினால் போதாது. இந்தியா முழுவதும் இதற்கான போராட்டம் எதிரொலிக்க வேண்டும். எனவே தான் எஸ்.டி.பி.ஐ கட்சி தேசிய அளவில் பதிவு செய்யப்பட்டு, தேசிய அளவில் வலுவோடு இயங்கி வருகிறது. நீதி மிக்க ஆட்சியை அமைப்பதே இதன் இலக்கு.

சமீபத்தில் அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டது கருத்து நாம் கருத்து தெரிவித்திருந்தோம். நீதியின் குரல் நெறிக்கப்பட்டதற்கு அஃப்சல் குருவின் தூக்கு சாட்சி.இது நீதியின் பெயரை சொல்லி செய்யப்பட்ட கொலை. எஸ்.டி.பி.ஐ கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது. இதனை திசை திருப்ப வீரப்பன் கூட்டாளிகள் என்று சொல்லி நால்வருக்கு தூக்கு. சமீபத்தில் நடந்த ஹைதரபாத் குண்டு வெடிப்பு கண்டிக்கத்தக்க செயல். அதேசமயம் உள்துறை அமைச்சரும்,உள்துறை அமைச்சகமும் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்று அறிவிக்கும் முன் பாரதிய ஜனதா கட்சி அறிவிக்கிறது. பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகள் இதற்கு காரணம் என்று பாரதீய ஜனதாகட்சி அறிவிப்பதை காணும் போது பாரதீய ஜனதா கட்சிக்கும், பாகிஸ்தானின் தீவிரவாத கும்பலுக்கும் தொடர்புள்ளதோ என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது. இவர்களின் அரசியல் சித்து விளையாட்டுக்காக இது போன்ற குண்டு வெடிப்புகள் நடத்தப்படுகிறது என்றே நாம் கருதுகிறோம்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு சம்பந்தமாக தேர்தல் சமயங்களில் வாக்குறுதி கொடுக்கும் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு மறந்து விடுகின்றனர்.ஓட்டுக்காக பொய்யான வாக்குறுதிகள் முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கப்படுகிறது. நாட்டின் முதுகெலும்பு ஊழலால் அடித்து நொறுக்கப்படுகிறது. எனவே இதற்காக போராடுவது ஒவ்வொரு இந்தியனின் கடமை.திப்பு சுல்தான்,பேரரசர் பகதுர் ஷா, பகத்சிங் போன்றோரின் வாரிசுகள் நாம். இது போராட்டத்திற்கான தருணம். இந்த தேசம் நம்மிடம் அதன் பிரச்சனைகளின் தீர்வுக்காக எதிர்பார்த்து உள்ளது. எனவே நாம் அனைவரு ஒன்றிணைந்து சக்தியுடன் இந்த தேசத்தின் ,தேச மக்களின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் எஸ்,.டி.பி.ஐ போட்டியிடும் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொருளாளர் சோமு நன்றி கூறினார். 

இம்மாநாட்டில் கட்சியின் செயல்வீரர்கள், நிர்வாகிகள், பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக