புதன், பிப்ரவரி 06, 2013

15-20 ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் இணையும் : மார்க்கண்டேய கட்ஜு !!

இன்னும் 15-20 ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் இணையும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும்,இந்திய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். 

டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குழு விவாத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், "பாகிஸ்தான் என்பது ஒரு நாடு அல்ல.பிரித்தாளும் கொள்கையை கொண்ட பிரிட்டிஷாரால் செயற்கையாக உருவாக்கப்பட்ட போலியான நாடு.இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த சிந்து, பஞ்சாப்தான் பாகிஸ்தானாக உள்ளது. இரு நாடுகளுக்குமிடையே நடந்த போர் பற்றி பேசுவது தேச விரோதம் ஆகும். போர்களினால் நமது நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.போருக்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்பதையும்,நமது நாடு ஏழை நாடு என்பதையும் அறியவேண்டும். 

இன்னும் 15-20 ஆண்டுகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைந்து, வலுவான,சக்திவாய்ந்த,மதச்சார்பற்ற மற்றும் நவீன அரசு அதிகாரத்திற்கு வரும்" என்றார்.                                                                                             1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக