வியாழன், பிப்ரவரி 28, 2013

உலகின் மிக உயரமான ஹோட்டல் துபாயில் திறப்பு !!

உலக நாடுகள் வானுயர ஹோட்டல்களை கட்டி பெரும் பெரும் பணக்காரர்களுக்கு விருந்து வைத்து வருகிறது. இதில் ஐரோப்பிய, அமெரிக்கா நாடுகளுடன் தற்போது அரபு நாடுகளும் கூட்டணி சேர்ந்திருக்கிறது.
ஏற்கனவே வானுயர ஹோட்டல்களை கட்டி அசத்தி வரும் துபாய், தற்போது உலகின் மிக உயரமான ஹோட்டல் என பெயர் சொல்லப்படும் விதமாக ஹோட்டலொன்றை கட்டி செவ்வாய் கிழமை திறந்து வைத்தது. ஜே. டபிள்யூ மெரிஹொட் மார்குயிஸ் துபாய் என்ற பெயர் கொண்ட இவ்ஹோட்டலில் உயரம் 1,164 அடிகளாகும் ஆகும்.
இவ்ஹோட்டலானது சுமார் 1.8 பில்லியன் (UAE) திர்ஹம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு கோபுரங்களைக் (டவர்) கொண்டது. தற்போது திறக்கப்பட்டுள்ள டவரானது 684 அறைகளையும் 120 சுயுட்களையும் கொண்டுள்ளது.சுமார் 355 மீற்றர் பரப்பளவு கொண்ட டவரானது 72 மாடிகளைக் கொண்டுள்ளது. இதன் மற்றைய டவர் 2014 ஆம் ஆண்டு திறக்கப்படவுள்ளதுடன் அதுவும் 804 அறைகளைக் கொண்டுள்ளது.
9 உணவகங்கள், 5 பார்கள், 2 போல் ரூம்கள் மற்றும் ஸ்பாவையும் இவ்ஹோட்டல் கொண்டுள்ளது.
நபரொருவருக்கான அறையொன்றின் ஆகக் குறைந்த கட்டணம் 326 அமெரிக்க டொலர்களாகும். ஹோட்டலின் 7 ஆவது மாடியில் 30 மீற்றர் நீச்சல் தடாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமாணப் பணிகள் 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பமாகியது.
எமிரேட்ஸ் குழுமத்திற்குச் சொந்தமான இவ் ஹோட்டல் மெரிஹொட் இண்டர்நேஷல் நிறுவனத்தின் முகாமைத்துவத்தின் கீழ் செயற்படுகின்றது.
துபாய் நாட்டிலேயே அமைந்துள்ள 'ரோஸ் டவர்' ( Rose Rayhaan by Rotana) ஹோட்டலே இதுவரை உலகின் மிக உயரமான ஹோட்டல் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. இதன் உயரம் 1,093 அடிகளாகும்.
தற்போது ஜே. டபிள்யூ மெரிஹொட் மார்குயிஸ் டுபாய் உலகின் மிக உயரமான ஹோட்டலாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் கின்னஸ் புத்தக்கத்திலும் பதிவாகியுள்ளது.
1


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக