வியாழன், பிப்ரவரி 09, 2012

ஒடிசா கள்ளச்சாராய விவகாரம்: மாநில கலால் துறை அமைச்சர் ராஜினாமா !

ஒடிசா கள்ளச்சாராய விவகாரம்: மாநில கலால் துறை அமைச்சர் ராஜினாமாஒடிசா மாநிலம் கட்டாக் மற்றும் குர்தா பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று மாநில கலால் துறை அமைச்சர் எ.யு.சிங்டியோ இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் நவீன் பட்நாயக்-க்கு அனுப்பியுள்ளார். இந்த ராஜினாமாவை முதல்வர் ஏற்றுக்கொண்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக