புதன், பிப்ரவரி 29, 2012

பாகிஸ்தானில் பேருந்து மீது துப்பாக்கிச்சூடு: 18 பயணிகள் பலி !

பாகிஸ்தானில்பேருந்து மீதுதுப்பாக்கிச்சூடு 18 பயணிகள்பலிபெஷாவர்:வடக்கு பாகிஸ்தானில் பேருந்து மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 18 பயணிகள் பலியானார்கள். எட்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. கொஹிஸ்தான் மாவட்டத்தில் ஹர்பன் நளா கிராமத்தில் செவ்வாய்கிழமை காலை இந்த அக்கிரம சம்பவம் நிகழ்ந்துள்ளது. பேருந்து ராவல்பிண்டியில் இருந்து கில்ஜித்திக்கு செல்லும் வழியில் இச்சம்பவம்
நிகழ்ந்துள்ளது. சாலையின் இரு புறத்திலும் மறைந்து இருந்தவர்கள் பேருந்து மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீஸ் அதிகாரி கூறுகிறார்.
ஆனால் தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. பாகிஸ்தானில் போராளி குழுக்கள் எதுவும் இப்பகுதியில் தீவிரமாக செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. இஸ்லாமாபாத்தில் இருந்து 208 கி.மீ தொலைவில் கொஹிஸ்தான் மாவட்டம் அமைந்துள்ளது. முன்னர் இப்பகுதியில் தீவிர சன்னிப் பிரிவை சார்ந்தவரை ஷியா பிரிவைச் சார்ந்த ஒருவர் கொலைச் செய்ததாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக