வியாழன், பிப்ரவரி 23, 2012

அர்ஜெண்டினாவில் பயங்கர ரயில் விபத்து 49 பேர் பலி ! (வீடியோ இணைப்பு உள்ளே)

Argentine Train Crash: 49 Dead, 600 Injured அர்ஜென்டினாவில் ரயில்நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 49 பேர் பலியாகினர். அர்ஜென்டினாவின் தலைநகர் பியூனஸ் ஏர்ஸ் ரயில்நிலையத்தில் பயணிகள் ரயில் ஒன்று ரயில்நிலையத்திற்குள் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தின் கடைசிப்பகுதியில் உள்ள தடுப்புப்பகுதியில் பயங்கரமாக மோதியது
. இதில் 49 பேர் பலியாயினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த விபத்தினால் பல ரயில்பெட்டிகள் சேதமடைந்தன காயமடைந்தவர்களை மீட்புப்படையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மோசமான ரயில் விபத்து இது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 1970-ம் ஆண்டு பிப்.1-ம் தேதி இதே ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில்மீது மற்றொரு ரயில் மோதியதில் 200 பேர் ‌பலியாகினர் , பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி ஏற்பட்ட ரயில்விபத்தில11 பேர் பலியாயினர் எனவும் மேலும் கூறினர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக