புதன், பிப்ரவரி 22, 2012

200 ஆண்டுகளாக பாதரசத்தில் வைத்து பாதுகாத்த இத்தாலி மம்மிக்கள் கண்டுபிடிப்பு !

200 ஆண்டுகளாக பாதரசத்தில் வைத்து பாதுகாத்த இத்தாலி மம்மிக்கள் கண்டுபிடிப்புபழங்காலத்தில் எகிப்தில் உள்ள பிரமிடுகளில் இறந்தவர்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை மம்மி என அழைக்கின்றனர். தற்போது அவை மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. இந்த நிலையில் இத்தாலியில் 200 ஆண்டுகளாக பதப்படுத்தி பத்திரமாக வைத்து இருந்த 5 மம்மிக்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றை பாதரசம், கடுமையான விஷம் அல்லது ரசாயன கலவையில் ஊறவைத்து பாதுகாத்து இருக்கலாம் என கருதப்படுகிறது. இவை 19-ம் நூற்றாண்டை சேர்ந்தது. இந்த மம்மிக்களின் உடல் பகுதி மிகவும் தடிமனாக உள்ளது. இது குறித்து தீவிர ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக