வெள்ளி, அக்டோபர் 12, 2012

நியூயார்க்கில் பீர் பாட்டில் திருடிய கன்னியாஸ்திரி ! (வீடியோ இணைப்பு)


நியூயார்க்கில் உள்ள ஒரு கடையில் கன்னியாஸ்திரி ஒருவர் பொருட்கள் வாங்க வந்தார். அவர் குளிர்பானங்கள் இருக்கும் பிரிவுக்கு சென்று ஒரு பீர் டின்னை திருடி தனது பையில் மறைத்து வைத்து கொண்டார்.  பின்னர் அங்கிருந்த தண்ணீர் பாட்டில் ஒன்றை கையில் எடுத்த அவர் அதற்கு மட்டும் காசு கொடுத்து விட்டு வெளியே சென்று விட்டார் ஆனால் அவர் பீர் திருடியதை கடைக்காரர்கள் கண்டுபிடிக்கவில்லை.  பின்னர் இருப்பை சரிபார்த்தபோது பீர் டின் ஒன்று
குறைந்து இருந்ததது. எனவே கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை பார்த்தபோது கன்னியாஸ்திரி பீர் பாட்டிலை திருடியது தெரிய வந்தது.

ஆனாலும் அவர் யார் என்பதை கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்த காட்சி யூடியூப் இணைய தளத்தில் வெளியானது. இதை ஒன்றரை லட்சம் பேர் பார்த்து உள்ளனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக