சனி, அக்டோபர் 20, 2012

மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதல்: மத்திய ரிசர்வ் படை வாகனம் சிதறல் !

பீகார் : மாவோயிஸ்டுகளின் அரசுக்கு எதிரான சண்டைகள் ஓய்ந்தபாடில்லை. பீகாரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 5 வீரர்கள் பலியாகினர். நாலவருக்கு படுகாயம் ஏற்ப்பட்டுள்ளது. ஒருவர் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பீகாரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மத்திய ரிசர்வ் போலீஸ் படை தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. கயா
மாவட்டத்தில் உள்ள பர்ஹா கிராமத்தில் இப்படையைச் சேர்ந்த 12 வீரர்கள், நேற்று அதிகாலையில் கண்ணிவெடி எதிர்ப்பு வாகனத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது, சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டை மாவோயிஸ்டுகள் வெடிக்கச் செய்தனர். அதில் சிக்கிய கண்ணிவெடி எதிர்ப்பு வாகனம் பலத்த சேதமடைந்தது.
இந்தத் தாக்குதலில் ஒரு துணை ஆய்வாளர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
பலத்த காயமடைந்த 4 வீரர்கள், ஹெலிகாப்டர் மூலம் பாட்னாவுக்குத் தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்ற வீரர்களுக்கு காயாவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வாகனத்தில் பயணம் செய்த வீரர்களில் ஒருவரைக் காணவில்லை. மாவோயிஸ்டுகளால் அவர் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக