செவ்வாய், அக்டோபர் 02, 2012

மழைக்கால அவசர தேவைக்கு இலவச தொலைபேசி சேவை !

சென்னை: வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தால் கீழ்க்கண்ட இலவச எண்ணை தொடர்பு கொண்டால் உடன் நடவடிக்கை எடுக்கப் படும் என சென்னை ஆட்சித்தலைவர் ஜெயந்தி தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டாலோ அல்லது இதர பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டாலோ, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கட்டணமில்லாத
தொலைபேசி எண் 1077 -இல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
மேலும், கடலோர பாதுகாப்பு தொடர்பாக உதவி பெற விரும்புவோர் சென்னையில் உள்ள, இயக்குநர், தமிழக காவல் துறை அலுவலக வளாகத்தில் உள்ள கட்டணமில்லாத தொலைபேசி எண்.1033-ல் தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக