செவ்வாய், அக்டோபர் 02, 2012

2ஜி:சாதிக் பாட்சா மரணம் தற்கொலைதான்: சிபிஐ !

சென்னை 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொண்டதாக, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 16 – ம் தேதி, சாதிக் பாட்சா தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக
கூறி சிபிஐ விசாரணை நடத்தியது. கடந்த 17 மாதங்களாக நடத்திய விசாரணையின் முடிவில் சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டதாக சிபிஐ கூறியுள்ளது.
சாதிக் பாட்சா கடைசியாக எழுதிய கடிதத்தில் இருப்பது அவரின் கையெழுத்து தான் என்று தடய அறிவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளதாகவும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆ ராசாவின் நெருங்கிய நண்பரான 38 வயதான சாதிக் பாட்சா கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். 2 ஜி ஊழல் வழக்கு வெளிச்சத்திற்கு வந்தபோது, பாட்சாவிடம் சிபிஐ அதிகாரிகளும், அமலாக்க பிரிவினரும் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தினர். அவரின் அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனைகளும்  நடைபெற்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக