சனி, அக்டோபர் 06, 2012

நான் ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்துவேன் : இம்ரான்கான் !

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-  பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மலை பகுதியில் அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் (டிரோன்) மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை  கொன்று வருகிறது. அடுத்து நான் ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்த அனுமதிக்க மாட்டேன்.  மாறாக இதுபோன்ற தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்த பாகிஸ்தான் விமான படைக்கு உத்தரவிடுவேன். அமெரிக்காவின் இந்த தாக்குதல் பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிரானது என ஆவேசமாக பேசினார்.  இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவின் முன்னாள் தூதர் மேரி ஆன், இங்கிலாந்து பத்திரிகையாளர் லாரன் பூத் ஆகியோரும் கலந்து கொண்டனர். லாரன் பூத் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் தங்கை ஆவார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக