பிபிசி கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் தொண்டுக் கிழவனார் பிரணாப் முகர்ஜி. பல்வேறு கூட்டணிகளை சிறப்பாக அமைக்க உதவியவர். 2014 லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாது. அப்போது குடியரசுத் தலைவரின் பங்கு மிக முக்கியமானதாக அமையும் என்பதால் பிரணாபின் செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கப்படவுள்ளன என்று கூறியுள்ளது.
மேலும் பிரணாபின் வெற்றி காங்கிரஸுக்குத்தான் பெரும் பலமாக அமைந்துள்ளதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது.
பாங்காக் போஸ்ட் கூறுகையில், குழப்பம் மிகுந்த இந்திய அரசியலில் பிரணாப் முகர்ஜியின் செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறும். அதற்கு அவரது நீண்ட கால அரசியல் அனுபவம் உதவி புரியும் என்று கூறியுள்ளது.
தி ஆஸ்திரேலியன் கூறுகையில், பொருளாதார ஏற்றத்தாழ்வு, நாடாளுமன்றத்தில் தொடரும் குழப்பங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில், பிரணாப் முகர்ஜி, சற்று சிறப்பாக செயல்ப முனைவார் என்று கூறியுள்ளது. மேலும் ஒரு படி போய், நாடாளுமன்றத்தில் ஸ்தம்பிப்பு நிலை வரும்போது குடியரசுத் தலைவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி மல்லுக்கட்டும் கட்சிகளை அழைத்து அவர் பேசக் கூடும் என்றும் தி ஆஸ்திரேலியன் கூறியுள்ளது.
இவ்வாறாக உலக மீடியாக்கள் பிரணாப் முகர்ஜி குறித்த தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்கை குண்டக்க மண்டக்க விமர்சித்த டைம் இதுவரை பிரணாப் குறித்து பெரிதாக கருத்து தெரிவிக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக