இதைத்தொடர்ந்து ராணுவம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அவர்களை எதிர்த்து புரட்சிப்படையினரும் தாக்கி வருகிறார்கள். புரட்சிப்படையில் சில பிரிவினர் துருக்கி மற்றும் ஈராக் பகுதிகளில் பதுங்கி இருந்து தாக்கினார்கள். அவர்கள் சிரியாவில் எல்லையோர பகுதிகள் பலவற்றை இப்போது கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு நிலமை மோசமடைந்து வருகிறது.
துருக்கி எல்லை பகுதியில் பெரும் பகுதி புரட்சி படையிடம் வந்துவிட்டதாக புரட்சிப்படை தளபதிகள் அறிவித்துள்ளனர். அவர்கள் அங்கிருந்து சிரியாவின் உள்பகுதியை நோக்கி முன்னேறி வருகிறார்கள். அவர்களை ஒடுக்க கூடுதல் ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே சிரியாவில் பெரிய அளவில் மோதல் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக