செவ்வாய், ஜூலை 31, 2012

மோடி குஜராத்தின் புலியாம் – காங்கிரஸ் எம்.பி பாராட்டு !

Narendra Modi with Congress MP Vijay Dardaஅஹ்மதாபாத்:கடந்த சில நாட்களாகவே குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கும் செய்திகள் வலம் வருகின்றன. அந்த வரிசையில் தற்பொழுது மஹராஷ்ட்ரா மாநில காங்கிரஸ் எம்.பியும் சேர்ந்துள்ளார். அஹ்மதாபாத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய மஹராஷ்ட்ரா மாநில
எம்.பியான விஜய் தார்தா கூறியது: ‘பொறுப்புணர்விலும், பணிகளைச் செய்து முடிப்பதில் காட்டும் அர்ப்பணிப்பு உணர்விலும் புலியைப் போன்று செயல்படுகிறார்’ என குறிப்பிட்டார். அதன் பிறகு பேசிய மோடி, ‘என்னைப் பாராட்டிப் பேசியதற்காக விஜய் தார்தாவுக்கு காங்கிரஸ் கட்சி விளக்கம்கேட்டு நோட்டீஸ் வழங்கியது என்பதுதான் நாளைய முக்கியச் செய்தியாக இருக்கும். அதில் எனக்கு எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை’ என்றார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த காங்கிரஸ் எம்.பி.யான விஜய் தார்தா, மராத்தி பத்திரிகையான ‘லோக்மத்’தின் ஆசிரியராக உள்ளார். பத்திரிகைத் துறையில் அவரது சிறந்த சேவையைப் பாராட்டி, அகமதாபாதில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘தருண் கிராந்தி’ விருது வழங்கப்பட்டது. சிறந்த சமூக சேவைக்கான விருதுகள், யோகா குரு பாபா ராம்தேவுக்கும், ஜெயின் சர்வதேச வர்த்தக மையத்துக்கும் வழங்கப்பட்டன.
ஏற்கனவே பாபா ராம்தேவ், மோடி ஊழல் எதுவும் செய்ததாக நான் காணவில்லை என கூறியுள்ளார். மேலும் சமாஜ்வாதிக் கட்சியைச் சார்ந்தவர் என கூறப்படும் ஷாஹித் சித்தீகி என்பவர் மோடியிடம் பேட்டியெடுத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக