வியாழன், ஜூலை 26, 2012

எடியூரப்பா மீது வழக்கு பதிவுச்செய்ய லோக் ஆயுக்தா நீதிபதி உத்தரவு !

Lokayukta court orders probe against Yeddyurappaபெங்களூர்:நில விடுவிப்பில் முறைகேடு நடைபெற்றதாக அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் கர்நாடகா மாநில பா.ஜ.க முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு தொடர லோக் ஆயுக்தா நீதிபதி உத்தரவிட்டார். கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் ராகவேந்திரா ஆகியோர் பத்ராவதியில் உள்ள 69 ஏக்கர் நிலத்தை முறைகேடாக விடுவித்ததாக, வழக்குரைஞர் வினோத் லோக்ஆயுக்தவில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனு, நீதிபதி
என்.கே. சுதிந்திரராவ் முன்னிலையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, புகார் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்துமாறு லோக்ஆயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மேலும், புகார் குறித்த ஆவணங்களின் மற்றொரு தொகுப்பை நீதிமன்றத்தில் புதன்கிழமை அளிக்கவேண்டும் என்றும் மனுதாரர் வினோத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக